ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு.. 250 காளைகள்.. 200 காளையர்கள் செம மோதல்!
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதுநாராயணபுரம் கிராமத்தில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா போட்டியைத் தொடங்கி வைத்தார். 250 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சேதுநாராயணபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு போட்டி இன்று நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று ஒரு குழுவிற்கு 50 பேர் வீதம் களம் இறங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காயம் அடைந்த வீரர்களின் அவசர உதவிக்கு 3 ஆம்புலன்ஸ்களும், 1 தீயணைப்பு வாகனமும் , 3 மருத்துவ குழுக்களும் நிறுத்தப்பட்டிருந்தன. 250 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications