ஹெல்மட் சரியா போடல.. குறுக்கே வந்த நாய்.. பைக்கில் வந்த போலீஸ்காரர் பேரிகார்ட்டில் மோதி பலி!
சாலை தடுப்பு கம்பியில் மோதி போலீஸ்காரர் பலியானார்
Recommended Video
விருதுநகர்: நாய் ஒன்று குறுக்கே வந்துவிடவும்.. பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் நிலைதடுமாறி.. ரோட்டில் இருந்த பேரிகார்ட்டில் தலை மோதி உயிரிழந்தார்.
விருதுநகர் எம்.ரெட்டியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு காவலராக வேலை பார்த்து வந்தவர் சாம்பிரேம் ஆனந்த். இவர் சொந்த ஊர் பொம்மக்கோட்டை.

நேற்றிரவு வேலை விஷயமாக சென்றுவிட்டு, முத்துராமலிங்கபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறிய ஆனந்த், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் போய் பைக்கில் மோதிவிட்டார். இதில், அவரது தலை அந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதி ரத்தம் கொட்டியது.. இதை கண்டு அலறிய பொதுமக்கள் அவரை உடனடியாக அருப்புக் கோட்டை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.. அதனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் வரும்போது, இவர் ஹெல்மட் போட்டுதான் வந்திருக்கிறார்.. ஆனால், அதை சரியாக போடவில்லை.. சின்ஸ்ட்ராப் என்னும் பாதுகாப்பு பட்டையை அவர் இழுத்து பொருத்தியிருந்தால், தலையில் இந்த அளவுக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்கிறார்கள். போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications