கடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை
விருதுநகர்: கடவுளை நம்புகிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், தேமுதிக இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாகும். இது ராசியான கூட்டணியாகும். அழகர்சாமி, கேப்டன் விஜயகாந்த் மனதில் இடம்பிடித்த வேட்பாளர் ஆவார்.

ரயில்வே பாலம்
அவரை வெற்றி பெற வைத்தால் விருதுநகர் தொகுதியில் அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்பார். குறிப்பாக திருமங்கலத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே பாலத்தை உடனடியாக முடித்து வைப்பார்.

கோடி கோடியாக பணம்
இங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து எதையும் செய்யாதவர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர்கள் வீட்டிலும் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கிறது.

அலிபாபா
விஜயகாந்தையும் தேமுதிகவையும் அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று அசிங்கப்பட்டுள்ளார்கள். எனவே அலிபாபாவும் 40 திருடர்களும் காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் யார் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

வேதனை
எங்களுடைய கூட்டணி கடவுளை நம்பும் கூட்டணி. ஆனால் கடவுளே இல்லை என்று சொல்லும் திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு நாளை யாரும் வேதனைப்படக் கூடாது. கடவுளை நம்புவோர் எனக்கு வாக்களியுங்கள் என்று பிரேமலதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications