சாத்தூரில் மழைநீரில் மறைந்திருந்த பள்ளத்தில் கைக் குழந்தைகளுடன் விழுந்த இரு பெண்களால் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் அவ்வழியாக கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்த இரு பெண்கள் அடுத்தடுத்து அந்த பாலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் வடிகால் அமைத்தல், சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சாத்தூர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினமும் சாத்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாத்தூர்- மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடை அருகே 3 பெண்கள் கைக் குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளம் வெளியே தெரியாத நிலையில், அதில் கால் வைத்தவுடன் கைக் குழந்தையுடன் வந்த பெண் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற பக்கத்தில் உள்ள இன்னொரு பெண் சென்ற போது அவரும் தவறி பள்ளத்தில் விழுந்தார்.
இதையடுத்து அங்கு கடைகளில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர். இந்த காட்சிகள் அங்கிருந்த கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இது வைரலாகி வருகிறது. அந்த பள்ளம் தோண்டப்பட்ட இடம் மழை நீரில் மூடியிருப்பதால் அங்கு எச்சரிக்கை பலகையாவது வைத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications