பாம்பு அதுவும் கட்டுவிரியன்.. இன்சூரன்ஸ் பணம் படுத்திய பாடு! சிவகாசி பெண் போல யாருக்குமே நேர கூடாது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த ஒரு கொடூர சம்பவம், மனித மனம் எவ்வளவு கொடூரமாக மாற முடியும் என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டு நமக்கு காட்டியுள்ளது.... இன்சூரன்ஸ் பணத்திற்கான ஆசை, ஒரு குடும்பத்தை நொடியில் நரகமாக மாற்றிவிட்டது.. இப்படியும் கூட கொடுமைகள் நடக்குமா? என்ற அதிர்ச்சிதான் பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது.. அப்படி என்னதான் நடந்தது சிவகாசியில்?
சிவகாசி முஸ்லிம் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா.. இவருக்கு 42 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் முபாரக் அலி.. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்..

சிவகாசி குடும்பம்
அந்த விபத்துக்கான காப்பீட்டுத் தொகையாக ரூ.11 லட்சம் பாத்திமாவுக்கு கிடைத்துள்ளது. கணவர் இறந்த பிறகு, தனது மகள் பர்வீன் (16), மகன் செய்யது பாரூக் (13), மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் பாத்திமா வாழ்ந்து வந்தார்.
4 வருடங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி (45) என்பவரை பாத்திமா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக வேலை பார்க்கும் அக்பர் அலி, ஆரம்பத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவே இருந்தார்.. ஆனால் காலப்போக்கில் அவரது மொத்த கவனமும் இன்சூரன்ஸ் பணத்தின் மீதே குவிந்தது.. எப்ப பார்த்தாலும் இன்சூரன்ஸ் பணம் பற்றி அடிக்கடி கேட்டு பாத்திமாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இன்சூரன்ஸ் பணம் படுத்தும் பாடு
"பணம் தர வேண்டும்" என்ற வற்புறுத்தல், நாளுக்கு நாள் தம்பதிக்குள் சண்டையாக மாறியது. பாத்திமா பணம் தர மறுத்ததால், அக்பர் அலி பாத்திமாவை டார்ச்சர் செய்ய துவங்கி உள்ளார்.. ஒருகட்டத்தில் பாத்திமாவை கடுமையாக தாக்கியும் உள்ளார்.. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பாத்திமா சிவகாசி டவுன் போலீசில் புகார் தரவும், போலீசார் அக்பர் அலியை கைது செய்தனர்.
பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த சில மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் பழிவாங்கும் எண்ணம் அக்பர் அலியின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது.. இன்சூரன்ஸ் பணம் தராவிட்டால், அவர்களில் யாருமே உயிருடன் இருக்க கூடாது என்ற கொடூர முடிவுக்கு வந்தார்..
நேற்று விடிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரம். அக்பர் அலி பெட்ரோல் கேனுடன் பாத்திமாவின் வீட்டுக்குள் நுழைந்தார். தூங்கிக் கொண்டிருந்த பாத்திமா, அவரது 2 பிள்ளைகள், மாமியார் ஆகியோரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். நொடியில் வீடு தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சீரியஸ் கண்டிஷன்
இந்த கொடூர செயலில் அக்பர் அலிக்கும் தீக்காயம் ஏற்பட்டது.. இதை அக்பர் அலியே எதிர்பார்க்கவில்லை.. இதனால் பதறிப்போன அவர், எரிந்த ஆடைகளை களைந்து எறிந்தபடி, சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள சிவகாசி டவுன் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று சரணடைந்தார்... உடலில் தீக்காயங்களுடன், ஆடையில்லாமல் வந்த அவரை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீக்காயமடைந்த வீட்டில் துடிதுடித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பீவி உயிரிழந்தார்.
பர்வீன் 35 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பாத்திமா, அவரது மகன் மற்றும் அக்பர் அலி மூவரும் 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்...
ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பால் கடிக்க வைத்து கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி விலகவில்லை.
கட்டுவிரியன் பாம்பு
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளராக பணியாற்றிய 56 வயது தந்தை கணேசனை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொன்றதாக அவரது மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதற்குள், இந்த சம்பவம் மக்கள் மனதில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "பணம் மனிதனை எவ்வளவு கீழ்த்தரமாக மாற்றுகிறது" என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications