ரீல்ஸ் மோகம்.. வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து சிக்கிய சிவகாசி இளைஞர்கள்! அதிரடி காட்டிய போலீஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக இளைஞர்கள் செய்த செயலால் சாலையில் சென்ற ஒரு பயணி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரீல்ஸ் மோகத்தில் வாகன ஓட்டியை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எப்போதும் இன்ஸ்டா ரீல்களில் மூழ்கி கிடக்கிறார்கள். அதேபோல், இன்ஸ்டாவில் வீடியோ போடுபவர்களும் அதிக அளவில் லைக்ஸ் பெறுவதற்கும், வியூஸ்களை பெறுவதற்கும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

எத்தனையோ பயனுள்ள வீடியோக்கள் இருந்தாலும், சிலர், வியூஸ்க்காக ஆசைப்பட்டு விபரீத முயற்சிகளிலும் வில்லங்க சேட்டைகளிலும் ஈடுபட்டு பலருக்கும் தொந்தரவு கொடுக்கிறார்கள். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகாசி அருகே இளைஞர்கள் இருவர் செய்த செயல், அப்பாவி வாகன ஓட்டி ஒருவரை விபத்தில் சிக்க வைத்தது.
அதாவது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு சண்டை போடுவது போல நடித்தனர். ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டும், அடித்துக்கொள்வது போலவும் ஆவேசமாக நின்றனர். இதனை பார்த்த பைக்கில் வந்த ஒரு வாகன ஓட்டி, சாலையை கவனிக்காமல், ஏன் இரண்டு பேரும் சண்டை போடுகிறார்கள் என்ற ரீதியில் பார்த்துக்கொண்டே சென்றார்.
அப்போது அவருக்கு முன்னால் சென்ற பேருந்து ஒன்று பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. சண்டையை கவனித்து வந்த வாகன ஓட்டி முன்னே பஸ் நின்றதை கவனிக்கவில்லை. இதனால் பஸ்சில் மோதி கீழே விழுந்தார். விபத்தில் சிக்கியதை பார்த்த அந்த இரு இளைஞர்களும் சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்தனர்.
அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன் மட்டுமன்றி, தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்தனர். இணையத்தில் வைரலாக பரவிய இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இப்படி வீடியோ போடுபவர்கள் மீது தயவுதாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ரீல்ஸ் மோகத்தில் வாகன ஓட்டியை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அருணாசலப் புரத்தை சேர்ந்த காளிராஜன் (வயது 21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications