காமராஜர் பிறந்த விருதுநகரில் நாடாளுமன்ற பலப்பரீட்சையில் "பாஸ்" ஆக போவது யார்? விறுவிறு அலசல்
Recommended Video

சென்னை: விருதுப்பட்டியாக இருந்து பின்னர் விருதுநகராக மாறியது தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான விருதுநகர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.
விருதுநகர் லோக்சபா தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் உருவானது. இதில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.
தகவல் இல்லை
இந்த தொகுதியின் எம்பியாக டி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை சேர்ந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் எத்தனையாவது வகுப்பு வரை படித்துள்ளார் என்ற தகவல்கள் இல்லை.

74 சதவீதம்
இவர் நாடாளுமன்றத்தில் 11 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மொத்தம் 842 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரது வருகை பதிவேடு நன்றாகத்தான் உள்ளது. அதாவது 74 சதவீதம் ஆகும்.

ஜாம்பவான்கள்
இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,50,495 ஆகும். ஆண் வாக்காளர்கள் 669,589 பேரும் பெண் வாக்காளர்கள் 680,906 பேரும் உள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வி
இவர் வீழ்த்தியது தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான வைகோ ஆவார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2,61, 143 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

வெற்றி
தமிழகத்தின் சிறந்த கல்வி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில், வரும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. மக்களின் மனநிலைக்கேற்ப அந்த சூழல் வாக்குப் பதிவில் பொத்தானை அழுத்தும் நேரத்தில் மாறக் கூடியது என்பதாலும் தற்போதைய மாறிப் போயுள்ள சூழலாலும் வெற்றி பெறும் கட்சியைக் கணிப்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications