விஏஓ டூ சர்வேயர்.. பதிவுத்துறை, மின்துறையில் பொதுவெளியில் அசிங்கமாக சிக்கி.. விழிக்கும் விருதுநகர்
விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது.
அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது.. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி, மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறார்கள்.

சர்வேயர்: 2 நாட்களுக்கு முன்புகூட, விழுப்புரம் மாவட்டத்தில் 2 சர்வேயர்கள் லஞ்ச புகாரில் சிக்கினார்கள். மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
இது குறித்து குமாரின் மருமகன் மாணிக்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கவும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், தாலுகா அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மாணிக்கம், சர்வேயர்களிடம் தந்த போது, புரோக்கர் சரத்குமாரிடம் தருமாறு சொன்னார்கள்..

இடைத்தரகர் கைது: அங்கிருந்த சரத்குமாரிடமிருந்த பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், இடைத்தரகர் சரத்குமார், 28, தலைமை சர்வேயர் தங்கராஜ் (37) லைசன்ஸ் சர்வேயர் பாரதி (32) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
4 நாட்களுக்கு முன்புகூட விருதுநகர் விஏஓவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துள்ளது.. அதாவது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள டிமானகசேரியில் விஏஓ-வாக பணியாற்றியவர் அம்மையப்பன். இவர் கடந்த 2010ம ஆண்டு, வாரிசு சான்று வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
விருதுநகர் விஏஓ: இதுகுறித்த புகாரின்பேரில், அம்மையப்பனை விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் கைது செய்தனர்.. இது தொடர்பாக வழக்கில் 2019-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் 3 வருட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அம்மையப்பன், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த மனுவை தற்போது விசாரித்த நீதிமன்றம், அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது, ஏற்கனவே நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

இதேபோல, கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிக்க, 3 ஆயிரம் கேட்டுள்ளார் வட்ட வழங்கல் அலுவலல்ர சுமதி.. இவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்..
திருவண்ணமலை: இதே திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர் இன்று சிக்கியிருக்கிறார்.. தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.. இதுகுறித்து சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் கேட்டதற்கு, 6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இன்று இவரும் கைதாகி உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications