விருதுநகரில் அடிக்கடி உறவினர்களை பஞ்சாயத்துக்கு கூப்பிட்ட ராமகலா.. கோபத்தில் கணவன் செய்த காரியம்
விருதுநகர் : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சமையல் மாஸ்டர் பாலாஜி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிச்சுபட்டியில் மனைவியின் சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்தார்.அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தட்டிக்கேட்க உறவினர்களை வரவழைத்துள்ளார் அவரது மனைவி ராமகலா.. இதனால் ஆத்திரம் அடைந்த சமையல் மாஸ்டர் பாலாஜி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 39 வயதாகும் பாலாஜி சமையல் மாஸ்டர் ஆவார். இவருக்கும், சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள பிச்சுபட்டி காலனியை சேர்ந்த ராமகலா (29) என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

பாலாஜி தனது மனைவியின் சொந்த ஊரான பிச்சுபட்டி காலனியில் தான் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதை தட்டிக்கேட்க ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று அவர்கள் வீட்டுக்கு வெளியே நின்று உறவினர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு முற்றிய நிலையில் பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை சீவினார்
அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு ராமகலாவின் தம்பி வீட்டுக்குள் ஓடி வந்துள்ளார். ராமகலா ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அப்போது பாலாஜி, அவரையும் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற உறவினர்களும் ஓடிவந்து பார்த்தபோது, ராமகலா உயிரிழந்து கிடந்தார்.
ராமகலாவின் தம்பி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே தப்பி ஓடிய பாலாஜி நேரடியாக எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி அடிக்கடி பஞ்சாயத்துக்காக உறவினர்களை கூட்டி வந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications