உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.04 கோடியாக உயர்வு
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.04 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,04,02,389 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,07,515 ஆகும்.

கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 56 லட்சமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 42 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 57,508 பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,81,527 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.28 லட்சமானது. அது போல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,70,488 ஆனது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரமாகும்.
ரஷ்யாவில் 6.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 9,166 ஆகும். இந்தியாவில் 5.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 16,904 ஆகும். பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,11,965 ஆகும். இங்கு 43,575 பேர் பலியாகிவிட்டனர்.
ஸ்பெயினில் 2.96 லட்சம் பேரும், பெருவில் 2.82 லட்சம் பேரும், சிலியில் 2.75 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications