கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் கைது! அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு.. வந்தவுடன் தூக்கியது NIA
வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து, கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிறபகல் இந்தியா வந்து சேர்ந்தார்கள். இதில் அன்மோல் பிஷ்னோயை என்ஐஏ அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.
முறையான ஆவணங்கள் இன்றி, தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்கா அரசு தொடர்ந்த வெளியேற்றி வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறை கைதிகளை போல கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியிருக்கிறது. இதில் 197 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள். மீதி உள்ள மூவரில், ஒருவர் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய். மற்ற இருவர் பஞ்சாப்பில் தேடப்படும் குற்றவாளிகள் ஆவார்கள். இவர்கள் 200 பேரையும் ஏற்றி வரும் விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இன்று பிற்பகல் வந்து சேர்ந்திருக்கிறது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் லாரன்ஸ் பிஷ்னோய்யை கைது செய்திருக்கின்றனர்.
முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற முக்கிய வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார்.
இவர் கடந்த 2022 ஆண்டு ஏப்ரல் மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு அவர் தப்பினார். ரஷ்ய போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா இடையே அவர் பயணித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டிலிருந்தே என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு தளங்கள் வழியாக தனது கும்பலை அன்மோல் தொடர்ந்து இயக்கியதாக புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அன்மோல் இந்தியா வந்தவுடன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பாபா சித்திக் மகன் வலியுறுத்தியிருந்தார். மகாராஷ்டிராவில் அன்மோலுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அன்மோல் வந்தடைந்ததும், எந்த அமைப்பு முதலில் அவரை காவலில் எடுக்கும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்று சொல்லப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications