‛குற்றமற்றவர்’.. டொனால்ட் ட்ரம்ப் நிரபராதி.. அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. செம ட்விஸ்ட்
வாஷிங்டன்: 2020ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது எழுந்த புகாரில் அந்நாட்டு உயர்நீதிமன்றம் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. இதன்மூலம் டொனால்ட் ட்ரம்ப் நிம்மதியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2020ல் அதிபர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அப்போது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவர் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கினார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஜோபைடன் வெற்றி பெற்று அதிபரானார். இந்த வேளையில் அமெரிக்காவில் பல இடங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே தான் டொனால்ட் ட்ரம்ப் மீது முக்கிய புகார் எழுந்தது. அதாவது தோல்வி நெருங்கியதை தொடர்ந்து 2020ல் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவர் முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு செய்து, ஜனநாயகத்தை ஏமாற்ற முயன்றதாக புகார் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ட்ரம்ப் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ட்ரம்ப்புக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானார். மொத்தம் 27 நிமிடங்கள் வரை விசாரணை நடந்தது. இதையடுத்து அப்போது தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் நிரபராதி என நீதிமன்றம் கூறியது.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் ட்ரம்ப் நிம்மதியடைந்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ட்ரம்ப் போட்டியிட ஆர்வமாக உள்ளார். இத்தகைய சூழலில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் ‛‛இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த பழிவாங்கல் நடவடிக்கை என்பது அமெரிக்காவில் ஒருபோதும் நடக்கக் கூடாது'' என உற்சாகமாக தெரிவித்தார்.
-
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications