பின் லேடன் போன்று அல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதா?
வாஷிங்டன்: சிரியாவில் இடுப்பில் குண்டை கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் உடல் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அபு பக்கர் அல் பாக்தாதி (48). மிக கொடூரமான அமைப்பின் தலைவரான பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தேடி வருகின்றனர்.
அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 177 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

3 குழந்தைகள்
இந்த நிலையில் சிரியாவில் இட்லிப் என்ற இடத்தில் பாக்தாதி இருப்பதை அறிந்த அமெரிக்க ராணுவம் அவர் இருந்த இடத்தை சுற்றி வளைத்தது. இதையடுத்து பாக்தாதியின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பாக்தாதி தனது 3 குழந்தைகளுடன் ஒரு குகைக்குள் ஓடினார்.

குண்டுவெடிப்பு
அவரை துரத்தி கொண்டு ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்களுடன் மோப்ப நாய்களும் துரத்தின. இறுதியில் தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த பாக்தாதி இந்த குண்டுவெடிப்பில் பலியானார்.

தகவல் இல்லை
அவரது 3 குழந்தைகளும் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் பாக்தாதியின் உடல் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடல் எந்த கடல் பகுதியில் எப்போது வீசப்பட்டது என்பது குறித்து எந்த தகவல்களும் இல்லை.

வீடியோ
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியை பிடிப்பதற்கான ரெய்டின் போது இரு நபர்களை ராணுவத்தினர் பிடித்துள்ளனர். அவர்கள் ராணுவ காவலில் உள்ளனர். பாக்தாதி இறப்பு, ரெய்டு குறித்த வீடியோவோ போட்டோவோ இதுவரை வெளியிடப்படவில்லை.

கடலில் வீசப்பட்ட உடல்
கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலும் கடலிலேயே வீசப்பட்டது. அது போல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications