கொரோனா வைரஸ்...பிசிஜி ஊசி உயிரிழப்பை குறைக்கும்...புதிய ஆய்வில் தகவல்!!
வாஷிங்டன்: பிசிஜி தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் 30 நாட்களுக்கு தொற்று நோய் பரவுவதை தடுக்கலாம் என்று அமெரிக்க ஆய்வு பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதியவர்களிடம் இந்த ஊசியை சோதிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் அறிவியல் அட்வான்ஸ் என்ற பேப்பரில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. பிசிஜி தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் அடுத்த 30 நாட்களுக்கு கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறையும் என்று அந்தப் பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஊசியை அனைவருக்கும் கட்டாயம் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தால், மார்ச் 29ஆம் தேதி வரை உயிரிழந்த 2,467 பேரில் 468 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு. இந்தியா, சீனாவில் இந்த ஊசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால், அந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் குழந்தை பிறந்த 15 நாட்களில் காச நோயைத் தடுக்க பிசிஜி ஊசி போடப்படுகிறது. இந்த ஊசியை போட்டுக் கொள்வதன் மூலம் மற்ற தொற்று நோய்களும் கட்டுப்படுகிறது. ஆனால், அதேசமயம், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனாலும் இந்த இரு நாடுகளிலும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்த அறிக்கைகைக்கு எதிராக விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய இயற்பியல் கல்லூரியின் டீன் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி அளித்திருக்கும் பேட்டியில், ''உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கும், கொரோனாவை தடுக்கவும் பிசிஜி தடுப்பு மருந்து கொடுக்கலாம். போர்ச்சுகல் நாட்டில் இந்த தடுப்பு மருந்தை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ஆதலால் அங்கு கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதுவே அதன் அருகில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அங்கு இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வது இல்லை'' என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications