நிலவுக்கு செல்லும் Artemis II விண்கலத்தின் டாய்லெட்டில் திடீரென வந்த மர்ம வாடை! என்ன நடந்தது?
வாஷிங்டன்: 4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் ஆர்டெமிஸ் 2 விண்கலம், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேவேளையில், விண்கலத்தின் டாய்லட் பகுதியில் இருந்து வந்த எரிந்த வாடை விண்வெளி வீரர்களை பரபரப்பு அடைய வைத்து இருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 4 விண்வெளி வீரர்களுடன் ஆர்டெமிஸ் II திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி, ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோச், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

டாய்லெட்டில் இருந்த எரிந்த வாசனை
இதில் மூன்று அமெரிக்கர்கள், ஒரு கனடா வீரர் அடங்குவர். நிலவில் தரையிறங்காமல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பயணித்து, இதுவரை யாரும் பார்க்காத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இந்த விண்வெளி பயணம் சுமார் 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்னடி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களுடன் விண்கலம் புறப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. இதற்கிடையே, ஆர்டெமிஸ் விண்கலத்தில் உள்ள டாய்லெட்டில் வந்த எரிந்த வாசனை விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகளுடன் கட்டமைப்பு
விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட உடனேயே அதன் கழிவறையின் சிறுநீர்க்குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக அங்கு இருந்த விண்வெளி வீராங்கனை சரி செய்தார். 23 மில்லியன் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லெட், விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்கு கீழ் பகுதியில் உள்ளது.
ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி வீரர்கள் பயணிப்பதால், அவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த டாய்லெட் நவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட கழிப்பறை அமைப்பு பகுதியில் இருந்து திடீரென எரியும் வாசனை போன்ற வாடை வீசியதால் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.
எரிந்த வாடை வந்ததாக
விண்வெளி வீரர்கள் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், அந்த வாசனை பழைய மின்சார ஹீட்டர் (electric heater) நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தபோது வரும் எரியும் மணத்தைப் போன்றதாக இருந்தது. விண்வெளி வீராங்கனை கோச் கூறுகையில், கழிப்பறை பகுதியில் இருந்து எரியும் ஹீட்டர் மாதிரி வாசனை பலமுறை வந்தது என்று மிஷன் கண்ட்ரோல் யூனிட்டுக்கு தெரிவித்தார்.
இந்த வாடை எதனால் வந்தது என்பது இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட உடன் கழிப்பறையின் சிறுநீர் குழாய் (urine hose) பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை கோச் மறுநாளே சரி செய்தார். இந்த சூழலில் தான் தற்போது எரிந்தது போல வாடை வந்ததாக கூறப்பட்டுள்ளது திகிலை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
இது பற்றி நாசா விண்வெளி ஆய்வு வீரர்கள் கூறியதாவது:- கழிப்பறை கதவின் அருகில் உள்ள ஆரஞ்சு நிற insulation பொருளிலிருந்து இந்த வாசனை வந்திருக்கலாம் என்று நாசா அதிகாரிகள் முதலில் சந்தேகித்தனர். இதனால் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும், விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அந்த கழிப்பறையை பயன்படுத்தலாம் என்றும் மிஷன் கண்ட்ரோல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கழிவறையில் இருந்து வந்த வாசனையின் காரணம் தெளிவாக இன்னும் தெரியாத நிலையில், தற்போதைக்கு இந்த பிரச்சினை விண்வெளிப் பயணத்திற்கு உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications