Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைனோசர்களை அழித்ததை போல.. மனிதர்களை அழிக்க வரும் விண்கல்! விஞ்ஞானிகள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: '2025 PM2' என்ற விண்கல் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில், அதாவது 2.31 மில்லியன் மைல் தொலைவில், கடந்து செல்லும் என்று நாசா எச்சரித்திருக்கிறது.

2.31 மில்லியன் மைல் தொலைவு என்பது அதிகமாக தோன்றலாம். ஆனால், இது செவ்வாய் கிரகத்தை விட நெருக்கமான தொலைவாகும். நிலவு பூமியிலிருந்து சுமார் 238,900 மைல் தொலைவில் உள்ளது. இந்த விண்கல் சந்திரனின் தூரத்தை விட பத்து மடங்கு அதிகமான தொலைவில் இருக்கிறது.

Asteroid space NASA

இந்த விண்கல் சுமார் 190 அடி அகலம் கொண்டது, மேலும் மணிக்கு 41,390 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இவ்வளவு வேகத்தில் பயணித்தாலும், இது பூமிக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்பதால், இது ஒரு முக்கியமான ஆய்வுக்குரிய பொருளாகவே கருதப்படுகிறது. இந்த விண்கல் கடந்து செல்லும் போது பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். டைனோசர்கள் கூட இதுபோன்ற ஒரு விண்கல் மோதித்தான் அழிந்து போனது. இந்த விண்கல் மோதினால் கணிசமான அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும்.

ஆனால் நல்வாய்ப்பாக இந்த விண்கல் நம்மீது மோதாது ஒரு விண்கல்லை "அபாயகரமானது" என வகைப்படுத்த இரண்டு நிபந்தனைகளை நாசா நிர்ணயித்துள்ளது. ஒன்று விண்கல் பூமிக்கு 7.4 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்குள் கடந்து செல்ல வேண்டும். இரண்டாவதாக விண்கல் 85 மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்டதாக இருக்க வேண்டும். 2025 PM2 எனும் விண்கல் இரண்டாவது நிபந்தனையை பூர்த்தி செய்திருந்தாலும் அது பூமிக்கு போதுமான தூரத்திற்குள் வரவில்லை.

இந்த விண்கல் குறித்து ஆய்வாளர்க்ள கூறுகையில், ஏதென் விண்மீல் குழுவிலிருந்த இந்த விண்கல் வந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவை பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும் தன்மை கொண்டவை, ஆனால் பொதுவாக நிலையான பாதைகளை பராமரிக்கின்றன.

இந்த விண்கல் பாதுகாப்பானதாக கடந்து சென்றாலும், விஞ்ஞானிகள் இதை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். ஈர்ப்பு விசை காரணமாகவோ, பிற விண்வெளிப் பொருட்களுடன் மோதல் போன்ற காரணமாகவோ இந்த விண்கல் பாதையை மாற்றலாம். அப்படி மாறினால் அது பூமிக்கு ஆபத்தானதாக மாற்றும். எனவேதான் அதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

2025 PM2 மட்டுமின்றி, பல சிறிய விண்கற்களும் சமீப நாட்களில் பூமியைக் கடந்து சென்றுள்ளன. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் 2023 PX என்ற 73 அடி விண்கல் ஆகஸ்ட் 22 அன்று 577,000 மைல் தூரத்திற்குள் கடந்து சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 2025 QY மற்றும் 2025 QE2 என்ற 45 மற்றும் 110 அடி அளவிலான இரண்டு விண்கற்களும் அதிக தூரங்களில் இருந்து பூமிக்கு அருகாமையில் வந்து சென்றன.

பெரிய விண்கற்கள் அரிதானவை, ஆனால் மிகவும் ஆபத்தானவை. சுமார் 160 அடி அளவிலான விண்கல் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கி அழிவை ஏற்படுத்தலாம். 500 அடி மற்றும் அதற்கும் அதிகமான சைஸ் கொண்ட விண்கற்கள் நகரங்கள் அல்லது மாநிலங்கள் முழுவதும் சேதத்தை ஏற்படுத்தலாம், இருப்பினும் இத்தகைய தாக்கங்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன.

3,000 அடிக்கு மேல் உள்ள விண்கற்கள் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தலாம், இது 700,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆறு மைல்களுக்கும் அதிகமான பெரிய விண்கற்கள் பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்தும், இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கும் என்று கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+