அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம்
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி அஸ்ட்ராஜெனிகா மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கியுள்ளது.
வாஷிங்டன் : ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி அஸ்ட்ராஜெனிகா மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து அங்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன. எந்த தடுப்பூசியும் இதுவரை சரியான தீர்வை தந்ததாக உலக சுகாதார மையம் உறுதி செய்யவில்லை. எனினும் அவசர கால பயன்பாட்டிற்காக பல்வேறு நாடுகள் கிடைக்கும் மருந்தை பயன்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போன்றவை சோதனையில் முன்னணியில் உள்ளன. அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தும் சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து போதிய பலனை தரவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மத்தியில் தான் தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கடந்த செப்டம்பர் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. 3ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்தது. ஒரு வார காலத்திற்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
தடுப்பூசியின் சோதனையில் கண்டறிய முடியாத பின்விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டதால் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் சோதனை உலகளாவிய அளவில் கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து அங்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications