மரணத்தில் இருந்து கம்பேக்! "63 நாட்கள் எதுவுமே இல்லை!" செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த ஒளி! வியப்பு
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள சிக்னல் ஆய்வாளர்களுக்குப் பயங்கர மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அங்கே என்ன நடந்தது, ஏன் நாசா ஆய்வாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தில் அவர்கள் தொடர்ந்து தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அங்கு விரிவான ஆய்வை செய்ய நாசா செவ்வாய் கிரகத்திற்கு இன்ஜெனிட்டி என்ற ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்த இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் முதலில் தனது மிஷனை ஆரம்பித்தது.
இன்ஜெனிட்டி: அதன் பின்னர் அங்கே 50க்கும் மேற்பட்ட பயணங்களை இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே தனது 52ஆவது பயணத்தின் போது, இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் ஓர் இடத்தில் இருந்து கிளம்பிய சில நொடிகளில் அத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடந்துள்ளது. அதன் பிறகு இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரில் இருந்து எந்தவொரு சிக்னலும் கிடைக்கவில்லை.
இதனால் நாசா ஆய்வாளர்கள் கவலையடைந்தனர். மீண்டும் இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், அதில் பெரிதாக எந்தவொரு பயனும் இல்லாமல் இருந்தது. சுமார் 60+ நாட்களாக இதே நிலைதான் தொடர்ந்தது. இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 63 நாட்களுக்குப் பிறகு அதில் இருந்து மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது.
கம்பேக்: அந்த ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்த நிலையில், அனைத்து விதமான சோதனைகளும் அதில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்தும் சரியாக இருப்பது உறுதியான நிலையில், அந்த ஹெலிகாப்டர் மீண்டும் தனது 52ஆவது பயணத்திற்குத் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கிடைத்துள்ள டேட்டாவை வைத்துப் பார்க்கும் போது, கடந்த ஏப்ரல் மாதம் இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படங்களை எடுப்பதற்காக ஹெலிகாப்டர் 363 மீட்டர் உயரத்திற்குச் சென்று அங்கே 139 வினாடிகள் இருந்துள்ளது. அப்போது தான் சிக்னல் கட் ஆகியுள்ளது. இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
ஏன் நடக்கிறது: அதாவது ஆய்வாளர்கள் பூமியில் இருக்கும் நிலையில், அவர்களால் நேரடியாகச் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஹெலிகாப்டரை அங்கே கட்டுப்படுத்த முடியாது. இதனால் இடையில் ரோவர் இருக்கும். இந்த ரோவர் சாதனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்வெளியில் சுற்றி வரும். நாம் இங்கிருந்து அனுப்பும் சிக்னல்கள் ரோவருக்கு தான் முதலில் செல்லும், அதன் பிறகு ரோவரில் இருந்தே அவை ஹெலிகாப்டருக்கு செல்லும்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரோவருக்கும் ஹெலிகாப்டருக்கும் இடையே மலை வந்துவிட்டதே சிக்னல் டிராப் ஆகக் காரணமாக இருந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஆய்வாளர்கள் எடுத்த பலகட்ட நடவடிக்கைக்குப் பின்னரே சிக்னல் இப்போது மீண்டும் கிடைத்துள்ளது.
60 நாட்கள்: செவ்வாய் கிரகத்தில் இதுபோல சிக்னல்கள் கட் ஆகும் என்பது ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும், சில நாட்களில் சிக்னல்கள் கிடைத்துவிடும் என்றே நினைத்தார்கள். சுமார் இரண்டு மாதங்களுக்கு சிக்னல் கிடைக்காமல் இருந்த நிலையில், ஹெலிகாப்டரில் அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவே ஆய்வாளர்கள் கருதினர். இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அதன் சிக்னல்கள் கிடைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications