அமெரிக்காவில் இரண்டு முக்கிய பொறுப்புகளுக்கு... இந்திய வம்சாவளியினர் நியமனம்... பைடன் அதிடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் முக்கிய பொறுப்புகளில் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு நியமித்துள்ளது.
அமெரிக்காவில் இப்போது சுமார் 27 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுவாக இந்தியர்கள் உள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்க மக்கள்தொகையில் இந்தியர்கள் சுமார் 1.8% என்ற அளவிலேயே உள்ளனர்.

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தொடர்ந்து இந்திய வம்சாவளியினரையே நியமித்து வருகிறார். அதன்படி தற்போது சோனாலி நிஜவாஹன், ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி என இரண்டு அமெரிக்க இந்தியர்களை முக்கிய பொறுப்புகளில் பைடன் அரசு நியமித்துள்ளது.
அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இயங்கும் தன்னார்வ சமூக திட்டமான AmeriCorps-இன் வெளியுறவு விவகாரங்களின் புதிய தலைமை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியுறவுத் துறையில் வெளிநாட்டுச் சேவை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி சுமார் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதேபோல AmeriCorps-இன் திட்ட இயக்குநராக சோனாலி நிஜவாஹன் நியமிக்கப்பட்டுள்ளார். சோனாலி நிஜவாஹன் இதற்கு முன் கலிஃபோர்னியா கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இருவரும் பைடன் நிர்வாகத்தின் செயல்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போது எதிர்கொண்டு வரும் நான்கு முக்கிய பிரச்சினைகளான கொரோனா, பொருளாதார மீட்டெடுப்பு, இனவெறி பேதம், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இருவரும் கவனம் செலுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications