கொரோனா தடுப்பூசியால் 60,000 உயிரிழப்பு? "வேக்சின் போட்டபோது என்ன ஆச்சு தெரியுமா" எலான் மஸ்க் சர்ச்சை
வாஷிங்டன்: உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது தடுப்பூசிகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தடுப்பூசி குறித்து இணையத்தில் பல சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிலர் கொரோனா தடுப்பூசி குறித்து ஆதாரமில்லாத தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அந்த லிஸ்டில் எலான் மஸ்கும் சேர்ந்துள்ளார். கொரோனாவால் 60,000 பேர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததும், ஆக்சிஜனுக்காக மக்கள் அலைந்ததும் நமக்குத் தெரியும். அந்தச் சூழலில், மிகக் குறுகிய காலத்தில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் தான் உலகளவில் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியது. சரியான நேரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வேக்சின்கள் உயிரிழப்பை மிகப் பெரியளவில் குறைத்தது.

வல்லுநர்கள்
இதற்கிடையே தடுப்பூசிகள் குறித்து ஒரு நச்சுயியல் நிபுணர் வைத்துள்ள குற்றச்சாட்டு விவாதமாகியுள்ளது. எலான் மஸ்க் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, "எனக்கு இரண்டாவது டோஸ் போட்டபோது நான் சாகப்போவது போலவே உணர்ந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குச் சென்றேன்" என்று பதிவிட்டிருந்தார். அவர் பகிர்ந்த அந்த 5 நிமிட வீடியோவில் இருப்பவர் டாக்டர் ஹெல்முட் ஸ்டெர்ஸ் (Dr. Helmut Sterz).
ஹெல்முட் ஸ்டெர்ஸ், கொரோனாவுக்கு வேக்சின் கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனங்களில் ஒன்றான ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவில் நச்சுயியல் பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவர். 2007ம் ஆண்டிலேயே, அதாவது கொரோனா தடுப்பூசிகள் உருவாவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும், ஃபைசர் நிறுவனம் எம்ஆர்என்ஏ (mRNA) தொழில்நுட்பம் மூலம் வேக்சின் உருவாக்கிய நிலையில், அது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார்.
குற்றச்சாட்டு
ஜெர்மனி நாடாளுமன்றக் குழுவின் முன்பு ஆஜராகி அவர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ஃபைசர் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய 10 முக்கியமான பாதுகாப்பு ஆய்வுகள் தவிர்க்கப்பட்டன. மேலும், புற்றுநோயை உண்டாக்குமா என்பதற்கான (Carcinogenicity) ஆய்வுகள் முறையாகச் செய்யப்படவில்லை. ஜெர்மனியில் தடுப்பூசி போட்ட பிறகு சுமார் 2,133 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதை ஒரு அமெரிக்கக் கணக்கீட்டின்படி 30ஆல் பெருக்கினால், 60,000 மரணங்கள் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கலாம் என ஒரு பகீர் தகவலை வெளியிட்டார்.
விளக்கம்
அதேநேரம் ஸ்டெர்ஸின் இந்தக் கணக்கீட்டை ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் கார்ல் லூட்டர்பாக் உட்படப் பல விஞ்ஞானிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், ஆய்வாளர்களும் ஸ்டெர்ஸ் கருத்துகளில் முழு உண்மை இல்லை என்கிறார்கள். முதலில் தடுப்பூசி போட்ட பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அது அப்படியே பதிவு செய்யப்படும். ஆனால், அந்த மரணத்திற்குத் தடுப்பூசிதான் காரணம் என்பதை உறுதி செய்ய முறையான பிரேதப் பரிசோதனையும் ஆய்வும் தேவை. 2,133 மரணங்களும் தடுப்பூசியால் வந்தவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆதாரம் இல்லை
அமெரிக்காவின் தரவுகளை வைத்து, வெறுமன 30ஆல் பெருக்குவது என்பது அறிவியல் ரீதியாகத் தவறான அணுகுமுறை என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், தடுப்பூசி தொடர்பாக 10 கோடிக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வேக்சினால் இதயத் தசை அழற்சி (Myocarditis) வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் அதேநேரம் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம் என்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வு உறுதி செய்துள்ளது.
ஹெல்முட் ஸ்டெர்ஸ் முன்வைக்கும் இந்த வாதங்கள் எந்தவொரு அறிவியல் இதழிலும் வெளியாகவில்லை என்ற போதிலும் அவரது பேச்சை எலான் மஸ்க் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளதால் அது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications