உலகின் பயங்கரம் கொரோனா.. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்தில் கொத்துக்கொத்தாய் செத்து மடியும் மக்கள்!
வாஷிங்டன்: அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. மக்கள் கொத்துக்கொத்தாக மரணம் அடைந்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த நாடுகள் தவித்து வருகின்றன.
சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனாவிற்கு 2021ம் ஆண்டிலும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. உலக அளவில் கொரோனா தொற்றால் 10 கோடியே 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 23லட்சத்து 63 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 7 கோடியே 9லட்சத்து 84 ஆயிரம் பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 25,481,675 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எங்கு பாதிப்பு அதிகம்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் 27,896,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,871,060 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 9,662,305 பேரும், ரஷ்யாவில் 4,012,710 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 3,985,161 பேரும், பிரான்சில் 3,385,622 பேரும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகள்
ஒரு நாள் பாதிப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் ஒரே நாளில் 96,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 60,271, பிரான்சில் 25,387, ஸ்பெயினில் 18,114 பேரும் ஒரு நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 14,494 பேருக்கும், இங்கிலாந்தில் 13,013 பேருக்கும் கொரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் 12,956 பேருக்கும், இந்தியாவில் ஒரே நாளில் 12,760 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

அதிக மரணம்
ஒரு நாள் உயிரிழப்பை பொறுத்தவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 3,397 பேர் மரணம் அடைந்தனர். மெக்ஸிகோவில் 1,701 பேரும், பிரேசிலில் 1,357 பேரும் ஒரே நாளில் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் 1001 பேரும், ஜெர்மனியில் 708 பேரும் கொரோனாவால் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

பிரேசில்
ஒட்டுமொத்தமாக இதுவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 483,165 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 234,945 பேரும், மெக்ஸிகோவில் 168,432 பேரும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 155,399 பேரும், இங்கிலாந்தில் 114,851 பேரும், இத்தாலியில் 92,338 பேரும், பிரான்சில் 80,443 பேரும், ரஷ்யாவில் 78,134 பேரும், ஜெர்மனியில் 63,979 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications