பெர்முடா முக்கோணத்தை விடுங்க.. டைட்டானிக் டூ பல மர்மங்கள்! அட்லாண்டிக் கடலில் புதைந்துள்ள ரகசியம்
வாஷிங்டன்: அட்லாண்டிக் பெருங்கடல் குறித்து பிரமிக்க வைக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அட்லாண்டிக் கடலை சுற்றி புளோரிடா மாகாணம் உள்ளது. உலகிலேயே பசிபிக் பெருங்கடலுக்கு அடுத்த இரண்டாவது பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்தான். அட்லாண்டிக் பெருங்கடல் 47 மில்லியன் சதுர மைல்கள் கொண்டது.

அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவை துல்லியமாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவின் மொத்த பரப்பளவில் ஆறரை மடங்கை காட்டிலும் அதிகமானதை அட்லாண்டிக் கடலில் வைத்தால் கொள்ளும். அந்த அளவுக்கு பெரியது. உலகின் மொத்த பரப்பளவில் அட்லாண்டிக் கடல் 20 சதவீதம் ஆகும்.
அட்லாண்டிக் பெருங்கடல் மிகவும் ஆழமானது. அந்த கடலில் மிகவும் ஆழமான பகுதியின் பெயர் மில்வாக்கி ஆகும். இது பூர்டோ ரிகோ பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ஆழம் சராசரியாக 10,955 அடியாகும். அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையை பெருமளவுக்கு பங்கிட்டிருப்பது புளோரிடாதான்.
புளோரிடாவில் உள்ள புதிய மைர்னா கடற்கரை உலகின் சுறா மீன்கள் தாக்கும் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 முதல் 3 மணிக்கு மேல் புளோரிடாவில் சுறா தாக்கிய சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. இந்த பகுதியில் 139 சுறா தாக்குதல்கள் நடந்த நிலையில் 27 தாக்குதல்கள் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடந்ததாகும்.
சுறாக்கள் தாக்கினால் காயமோ பலியோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அட்லாண்டிக் என்பது பழைய பெயர். இதற்கு அர்த்தம் அட்லஸ் கடல் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது பெர்முடா முக்கோணம். இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்கள், இந்த பகுதியின் அருகே செல்லும் கப்பல்கள் மாயமாகி வருகிறது. சுமார் 70 ஆண்டுகளாக இந்த மர்மத்திற்கு காரணம் தெரியவில்லை.
7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது இந்த பெர்முடா முக்கோணம். இதன் ஒரு முனை அமெரிக்காவின் புளோரிடாவையும் அடுத்த முனை பூர்டோ ரிகோவையும் ஒரு முனை பெர்முடாவையும் இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட முக்கோண பகுதியின் பரப்புக்கு மேல் செல்லும் பொருட்கள் மாயமாகிவிடுவதாக சொல்லப்படுகிறது. இதன் மேலே செல்லும் பறவைகள் கூட காணாமல் போய்விடுகிறதாம்.
அது போல் இந்த பகுதியில் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். இந்த முக்கோணத்தை சாத்தான் முக்கோணம் என்றும் அழைக்கிறார்கள். மேலும் வேற்றுகிரகவாசிகளான ஏலியன்கள் அந்த முக்கோணத்தில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி மர்மங்கள் நிறைந்த அட்லாண்டிக் பெருங்கடலில்தான் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கி கிடக்கிறது. மேலும் அந்த டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்து சிதறி, அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகிவிட்டனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications