30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பல்வேறு ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானிலும் மிகப்பெரிய தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் உருவாகி இருக்கிறது.

குறிப்பாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்று கருதப்படுகிறது. இப்படியான சூழலில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த 30 நாட்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அதிபர் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தி இருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரானிய கச்சா எண்ணெய்யின் இரண்டாவது பெரிய கொள்முதல் நாடான இந்தியாவுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. இறக்குமதியைக் குறைத்து, மாற்று விநியோகஸ்தர்களை நாடுகள் கண்டறிவதே அமெரிக்காவின் நோக்கம்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, 8 நாடுகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார். அதில், கச்சா எண்ணெய் கொள்முதலில் குறிப்பிடத்தக்க குறைப்பு காட்டிய எட்டு நாடுகளுக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்குவதே இறுதி இலக்கு என்றும் கூறி இருக்கிறார்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications