Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகொரியாவுக்கு வந்த சோதனை! ஆக்‌ஷனில் இறங்கிய கிம்.. அதிகாரிகளுக்கு கொடுத்த ஆர்டர் இதுதான்!

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வடகொரியாவில் உணவுப்பஞ்சம் என்று தகவல் வெளியாகி வருவது வாடிக்கைதான் என்றாலும் இந்த முறை அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பது அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தை காட்டும் வகையில் உள்ளது.

உலகின் மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அந்த நாட்டு மக்களுக்கே வெளிச்சம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு நடைபெறும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகத்திற்கு தெரியாது.

அது மட்டும் கிடையாது பல சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற நாடாக வடகொரியா உள்ளது. அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்.

11 நாட்களுக்கு சிரிக்க கூடாது

11 நாட்களுக்கு சிரிக்க கூடாது

வடகொரியா வினோதமான உத்தரவுகள் மற்றும் தண்டனைகளுக்கு விதித்து தனது அணு ஆயுத சோதனை போலவே உலக நாடுகளை அதிர வைக்கும். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் கிம் ஜாங் அன்னின் தந்தையும், அந்த நாட்டின் முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என வினோதமான உத்தரவை வெளியிட்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே

ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே

சமீபத்தில் கூட தனது மகளின் பெயரை வேறு யாரும் வைக்கக் கூடாது என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டு இருந்தார். அதேபோல், மேற்கத்தியக் கலாச்சாரம் பரவுவதைத் தடுக்க நோக்கில் ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே பெற்றோருக்கும் குழந்தைக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்து வடகொரிய மக்களுக்கு ஷாக் கொடுத்தது. உள்நாட்டில் ஆட்சி இப்படியென்றால் சர்வதேச அளவில் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சண்டையிட்டு கடும் பொருளாதார தடைகளை வாங்கி வைத்துள்ளது.

 அதிகரித்த உணவு பஞ்சம்

அதிகரித்த உணவு பஞ்சம்

இதனால் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வடகொரியாவில் தற்போது உணவு பஞ்சமும் தலைவிரித்தாடுகிறதாம். அவ்வப்போது வடகொரியாவில் உணவுப்பஞ்சம் என்று தகவல் வெளியாகி வருவது வாடிக்கைதான் என்றாலும் இந்த முறை அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பது அங்கு நிலவும் கடுமையான பஞ்சத்தை காட்டும் வகையில் உள்ளது. உணவு பஞ்சம் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்த கிம் ஜாங் அன், விவசாய உற்பத்தி செயல் முறையை மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது முதல் முறை கிடையாது

இது முதல் முறை கிடையாது

மேலும் விவசாய உற்பத்தி சார்ந்து தீவிர மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதும் தான் நமது இலக்குளை அடைய முடியும் என கிம் ஜாங் அன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 1990 களில் வடகொரியாவில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு இருந்தது. இந்த உணவு பஞ்சம் காரணமாக சுமார் 2.50 லட்சம் பேர் உயிரிழந்த கொடுமையும் நடைபெற்றது.

 கொஞ்சம் கூட குறைக்காமல்..

கொஞ்சம் கூட குறைக்காமல்..

இந்த உணவு பஞ்சங்களில் இருந்து பாடம் கற்காத வடகொரியா தொடர்ந்து தனது அடாவடி போக்கில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனைகளை கொஞ்சம் கூட குறைக்காமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+