"பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி ரெடி.. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு போட பரிந்துரை.. அமெரிக்கா அதிரடி
பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் போடுவது சிறந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கருதுகிறார்கள்.
உலகம் முழுவதும் தொற்று கவ்வியுள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இந்த 2வது அலையின் தீவிரம் வீரியமானதாக இருந்தது.. அதனால்தான் லட்சக்கணக்கானோரையும் பலி கொண்டது.
இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி கொண்டிருக்கிறது.. சில நாடுகளில் 4 வது அலையும் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இதனால் நித்தம் நித்தம் இதுகுறித்து விஞ்ஞானிகள் நம்மை அலர்ட் செய்து, கொண்டிருக்கிறார்கள்.

வைரஸ்
மருந்துகள், சிகிச்சைகள் எதுவும் இந்த கொரோனா வைரஸுக்கு தீர்வாக இல்லாத சூழலில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது.. எனவே, உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.. சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுமையாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்த முயன்று வருகின்றனர்.

அமெரிக்கா
இந்த 3வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதைதான் பூஸ்டர் என்கிறார்கள்.. இநத் பூஸ்டர் டோஸை செலுத்த சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்திருந்தனர்.. காரணம், அமெரிக்காதான் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

8 மாதங்கள்
2வது டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வயது வித்தியாசமின்றி எல்லாருக்குமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வல்லுநர்கள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 8 மாதங்களை நிறைவடைந்த மக்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிபர் ஜோபிடனும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்... இந்நிலையில், இந்த பணியை அடுத்த வாரத்தில் தொடங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாம்.

பைசர்
அதுமட்டுமல்ல, தாங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் 3வது தவணையாக போட அனுமதிக்குமாறு பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.. ஆனால், இதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் வல்லுநர் குழு சம்மதம் தெரிவிக்கவில்லை.. தரவுகள் போதுமான அளவில் இல்லை என்பதால், இது இளம் வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரணம் சொல்லி மறுத்துள்ளனர்.

பூஸ்டர்
மற்றொருபுறம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது... இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக 18 வல்லுநர்களும் வாக்களித்தனர்... உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இது தொடர்பாக விரைவில் ஆலோசனையும் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications