விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணம்! விபத்துக்கு காரணம் இதுவா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்மம்!
வாஷிங்டன்: பெர்முடா முக்கோணம் பகுதியில் பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகிவிடுகிறது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இதற்கு பின்னால் எந்த அமானுஷ்ய காரணமும் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் தற்போது ஒரு முக்கியமான விஷயத்தை அவர்கள் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது விமானங்களும், கப்பல்களும் மர்மமாக மாயமாவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புளோரிடா, பெர்முடா, பியூரிட்டோ ரிகோ ஆகிய மூன்று இடங்களுக்கு இடையே உள்ள பகுதிதான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தின் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போய்விடுகிறது என்று சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில்தான், பெர்முடா தீவின் கடலுக்கு அடியில் சுமார் 20 கிலோ மீட்டர் தடிமன் கொண்ட ஒரு மிகப்பெரிய பாறை அடுக்கை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் வேறு எங்கும் காணப்படாத இந்தப் புவியியல் அம்சம், விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கார்னகி அறிவியல் மையத்தின் நிலஅதிர்வு ஆய்வாளர்கள் இது குறித்து கூறுகையில், "பொதுவாக, கடலடி மேலோட்டைக் கடக்கும்போது, நாம் பூமிக்கு அடியில் மேன்டல் பகுதியை அடைவோம் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், பெர்முடாவின் கீழே, மேலோட்டிற்குக் கீழ், டெக்டோனிக் தட்டுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு அடுக்கு அமர்ந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர். பூமியை ஒரு வெங்காயம் போல கற்பனை செய்துக்கொண்டால், அதை உரிக்கும்போது மேலே உள்ள பகுதி மேலோடு என்றும், அடுத்து உள்ள பகுதி மேன்டல் என்றும், கடைசியாக உள்ள பகுதி உட்கரு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், பெர்முடா கடல் பகுதியில், இந்த மூன்று அடுக்குகள் இல்லாமல் நான்காவதாக ஒரு அடுக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவே விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. வழக்கமாக எரிமலைகள் ஏதேனும் இருந்தால் இப்படியான அடுக்குகள் உருவாகியிருக்க கூடும். ஆனால், கடந்த 3 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இங்கு எந்த எரிமலையும் இல்லை. இப்படி இருக்கையில், இந்த பாறை அடுக்கு எப்படி உருவாகியிருக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.
இதற்கு சில காரணங்களையும் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முன்வைத்திருக்கின்றன. முதல் காரணம், நமக்கு தெரிந்து 3 கோடி ஆண்டுகளுக்கான தரவுகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கும் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு எரிமலை இருந்திருக்கலாம். அது நெருப்பு குழம்பை கக்கி, பாறை திட்டுக்களை உருவாக்கியிருக்கலாம். இரண்டாவது காரணம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா எனும் பெரும் கண்டம் பிரிந்தது. அந்த நேரத்தில் இந்த பாறை உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அதேபோல இதற்கு முன்னர் பெர்முடா முக்கோணம் பகுதியில் ஏற்பட்ட விபத்துகளுக்காக காரணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த பாறைக்கும், பெர்முடா முக்கோணத்தில் பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூழ்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா!











Click it and Unblock the Notifications