அமெரிக்காவில் பயங்கரம்.. ஹைதராபாத் தலித் மாணவர் சுட்டுக்கொலை.. பார்ட்டைம் வேலை பார்த்தபோது துயரம்
வாஷிங்டன்: பல் மருத்துவ படிப்பை முடித்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக சென்று கியாஸ் ஸ்டேஷனில் பார்ட்டைமாக பணியாற்றி வந்த ஹைதராபாத் தலித் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே. இவர் பல் மருத்துவ படிப்பை முடித்தவர். உயர்கல்வி பயில அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள டென்டன் பகுதியில் தங்கி படித்து வந்தார்.

மேலும் அவர் கியாஸ் ஸ்டேஷனில் பார்ட் டைமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் அங்கு வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயமடநை்த சந்திரசேகர் போலே பரிதாபமாக இறந்தார்.
சந்திரசேகர் போலே இறந்ததை தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவின் உறவினரான எம்எல்ஏ ஹரிஷ் ராவ் உறுதி செய்துள்ளார். சந்திரசேகர் போலேவின் வீட்டுக்கு சென்ற ஹரிஷ் ராவ் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுபற்றி ஹரிஷ் ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹைதராபாத்தின் எல்பி நகரை சேர்ந்த தலித் மாணவர் சந்திரசேகர் போலே பல் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவின் டல்லாசுக்கு உயர் படிப்புக்காக சென்றார். அங்கு அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது துயரமானது'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சந்திரசேகர் போலேவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர தெலுங்கானா அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பில், ‛‛அமெரிக்காவில் இறந்த சந்திரசேகர் போலேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது உடலை இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் GEICO என்ற நிறுவனத்தில் சீனியர் டேட்டா அனலிஸ்ட்டாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பாக சென்னையில் அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட்டாக பணியாற்றினார். 2021 முதல் 2023ம் ஆண்டு வரை அந்த பணியில் இருந்தார். அதற்கு முன்பாக 2020-2021ம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள ஹிட்டாசி எனர்ஜி நிறுவனத்தில் புரோகிராமர் அனலிஸ்ட்டாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
மொத்த உலகத்திற்கே பிரச்சனை வரும்.. பார்க்க போறீங்க.. ஈரான் விடுத்த வார்னிங்.. கவனமாக இருங்க! -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
திருப்பூரில் ஜவுளித்துறை அதிர்ச்சி: அமெரிக்க ஒப்பந்தத்தால் ரூ 100 கோடி காடா துணிகள் தேக்கம்












Click it and Unblock the Notifications