Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. AI மட்டுமில்லை Robots வைத்த பெரிய ஆப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஐடி துறையில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு என்பது ஊழியர்களின் வேலையை பறித்து வருகிறது. AI காரணமாக கொத்து கொத்தாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனமும் ஏஐ- பயன்பாட்டால் 15 சதவீதம் எச்ஆர்-களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் 6 லட்சம் ஊழியர்களை பணி நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரோபாக்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டு வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களின் பணிகளை பறித்து வருகிறது. குறிப்பாக ஏஐ புரட்சி ஐடி துறையை ஆட்டிப்படைத்து வருகிறது. ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏஐ-யால் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

layoffs-amazon-plan-to-replace-600-000-workers-with-robots-by-2027
Photo Credit:

மனிதர்கள் செய்யும் பணியை ஏஐ விரைவாகவும், துல்லியமாகவும் செய்வதால் ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி டிசிஎஸ், அக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அமேசானை எடுத்து கொண்டால் எச்ஆர் பிரிவில் பணியாற்றும் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு தான் காரணமாகும்.

இதன்மூலம் அமேசான் நிறுவனத்துக்கு 12.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அமேசான் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 6 லட்சம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் Internal Document-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‛‛2027 ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் 6 லட்சம் வேலைகளில் ரோபோக்களை அறிமுகம் செய்ய வேண்டும். இது நிறுவனத்தின் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப பயன்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் பொருட்களை எடுத்து பாக்கெட் செய்யும் பணிக்கு புதிய மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன்மூலம் வார்ஹவுசில் 1,60,000 பணிகள் காலியாகும். மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்களுக்கு பதில் 75 சதவீத வரை ரோபோக்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் நிறுவனத்துக்கு 12.6 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வரும் 2027 ம் ஆண்டுக்குள் அமேசான் நிறுவனத்தில் இருந்து 6 லட்சம் பேர் பணியை இழக்கலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் கார்ப்பரேட் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெயரை அமேசான் பெறும்.
இதுபற்றி அமேசான் சார்பில், ‛‛இது ‛மாஸ்' பணி நீக்கம் அல்ல. இது நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையாகும்'' என நியாயப்படுத்தி உ.ள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனென்றால் அமெரிக்காவில் நவீன ரோபோக்கள் தற்போது பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புரோட்டியஸ் மற்றும் சீக்வோயா போன்ற நவீன ரோபோக்கள் அமேசான் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரோபோக்கள் சென்சார்கள், கேமராக்கள் மற்றும் AI கட்டளையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கள் மனிதர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் பார்சல்களை நகர்த்துவது, தூக்குவது, வரிசைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றன. இதுதான் அமேசான் ஊழியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+