Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டும் டெல்டா.. அதிகரிக்கும் பாதிப்பு..அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை பயன்படுத்த விரும்பும் நாடுகள்..!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் கோவிட் -19 தடுப்பூசிகள் டெல்டா மாறுபாட்டைத் தடுக்கும் திறன் கொண்டவை அல்ல என்ற கவலை வளர்ந்து வருகிறது. சில நாடுகளில் டெல்டா வைரஸ் காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் மூன்றாவது டோஸ் கொடுக்கலாம் என்று நாடுகள் முடிவு செய்துள்ளன. தற்போதைய நிலையில் அஸ்ட்ராஜென்கா 60 சதவீதம் டெல்டாவிற்கு எதிராக பாதுகாப்பு தருகிறது.

தாய்லாந்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரையிலான சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே சீன தயாரிப்பான னோவாக் பயோடெக்கின் தடுப்பூசி போடப்பட்ட சிலருக்கு கூடுதல் டோஸ்களை வழங்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் சின்பார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸையும் அளிக்க முடிவு செய்துள்ளன.

டெல்டா மற்றும் அடுத்தடுத்த மரபணு மாற்ற வைரஸ்கள் ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படாத தடுப்பூசிகளின் பாதுகாப்பை உடைப்பதாகத் தெரிகிறது. மங்கோலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குறைந்த செயல்திறனயே தடுப்பூசிகள் காட்டி வருகின்றன. சீனாவின் தடுப்பூசிகளும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளும் கிட்டத்தட்ட இதேபோல் தான் உள்ளன.

நாடுகள் விருப்பம்

நாடுகள் விருப்பம்

பயோஎன்டெக் மற்றும் மாடர்னா போன்ற ஆகிய தடுப்பூசிகளுக்கு டெல்டா பிறழ்வு வைரஸ் சவாலாக உள்ளது. 90%க்கும் கீழாகவே பாதுகாப்பை வழங்குகின்றன. அஸ்ட்ராஜென்கா டெல்டாவிற்கு எதிராக 60% அளவுசெயல்படுவதாக ஒரு ஆய்வு காட்டுகிறது, இருப்பினும் இது 90% க்கும் அதிகமான மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் இதனை அதிகம் பயன்படுத்த நாடுகள் விரும்புகின்றன.

சீனா தகவல்

சீனா தகவல்

எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேற்கு நாடுகளின் தடுப்பூசிகளைப்போல சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் தங்களது தடுப்பூசிகள் மாறுபாடுகளுக்கு எதிராக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளவில்லை. சீன நோய்க்கான தடுப்பு மற்றும் தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளரான ஷாவோ யிமிங், மட்டும ஒரு கருத்தை கூறியிருந்தார்.அதாவது சீன தடுப்பூசிகள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பரவும் டெல்டா உள்பட மரபணு மாற்ற வைரஸ்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன என்றார்.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை
    தடுப்பூசி எப்படி

    தடுப்பூசி எப்படி

    சினோஃபார்ம் தயாரித்த இரண்டு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் கொரோனா 73% மற்றும் 78% பயனுள்ளதாக இருந்தன. பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கி முழுவதும் சினோவாக்கின் மருத்துவ பரிசோதனைகளின் பல்வேறு முடிவுகள் 50% முதல் 80% வரை செயல்திறனைக் கொண்டிருந்தன. எனினும் டெல்டா விவகாரத்தில் இந்த தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் பொது சுகாதார கல்லூரியின் பேராசிரியர் நிகோலாய் பெட்ரோவ்ஸ்கி கூறும் போது. பலவீனமான தடுப்பூசிகள் கோவிட் -19 க்கு எதிராக, குறிப்பாக மாறுபட்ட வைரஸ்களுக்கு எதிராக பாதுகாக்கும் திறனை இழந்துவிடுகின்றன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சிறந்த தடுப்பூசிகள் கூட மாறுபட்ட வைரஸ்களுக்கு எதிராக சரியாக வேலை செய்யவில்லை என்றார்.

    3வது டோஸ்

    3வது டோஸ்

    எனினும் அஸ்ட்ராஜென்கா உள்பட பல்வேறு தடுப்பூசிகளை 3வது டோஸ் போட்டு பார்த்து மக்களிடம் எப்படியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிய உலக நாடுகள் விரும்புகின்றன. இதன் மூலம் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உள்பட பல்வேறு புதிய மரபணு மாற்ற வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறனை அறிய முடியும். மூன்றாவது அலையை தடுக்க வேண்டும் என்பதற்கான இந்த முயற்சி காரணமாக ஏழைநாடுகளுக்கு செல்லும் தடுப்பூசிகள் திருப்பிவிடப்படும் என்பது கூடுதல் கவலையான விஷயம் ஆகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+