அமெரிக்காவின் மாடெர்னா தடுப்பு மருந்து கொரோனாவை குணப்படுத்தும்- முழு பாதுகாப்பானது என அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து கடுமையான கொரோனா பாதிப்பை குணப்படுத்தக் கூடியதும் பாதுகாப்பானதும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பு மருந்தும் சோதனைகளுக்குப் பின்னர் எத்தனை விழுக்காடு பாதுகாப்பானது எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 30,000 பேருக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைகளில் கடுமையான கொரோனா பாதிப்பை மாடெர்னா குணப்படுத்தக் கூடியது; முழுமையான பாதுகாப்பானது என அமெரிக்காவின் உணவு, மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது 94.1% பாதுகாப்பானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மருந்து ஆபத்தானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவெ ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாடெர்னா தடுப்பு மருந்தும் பாதுகாப்பானது என அமெரிக்கா ஒப்புதல் தந்தால் அடுத்தவாரம் முதல் பொதுமக்களுக்கு இது கொடுக்கப்படலாம். மாடெர்னா, ஃபைசர் நிறுவனங்களின் 200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை 2021-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில் பெறுவதற்கு அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருகிறது. அமெரிக்காவில் இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் இலவசமாகவே வழங்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications