அதிகரிக்கும் கொரோனா பரவல்.. நியூயார்கில் அவசர நிலை பிரகடனம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த வைரஸ் அவ்வப்போது தனது உருவை மாற்றி கொண்டு ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் ஒவ்வொரு வகை வைரஸாக பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் தடுப்பூசி போடுகிறார்கள்.
இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இல்லாத அளவுக்கு தொற்றானது பரவி வருகிறது. நாளொன்றுக்கு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 300 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலையால் நியூயார்க் மருத்துவமனையின் திறன் அதிகரிக்கும். அது போல் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசிக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சல் இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் தங்கள் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதே போல் செக் நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு மேல் இருப்பதால் அங்கும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது போல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சந்தைகளை மூடவும் பொது இடங்களில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்கள், ஹோட்டல்களை இரவு 10 மணிக்கு மூடவும் ஆணையிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications