அடேங்கப்பா.. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை.. அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலைனாவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்' என்று அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாகாணத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். அம்மாகாண வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இந்த நிலையில்தான், தைப் பொங்கலை கொண்டாடும் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அறிவிக்க வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதையேற்று, வடக்கு கரோலைனா மாநில கவர்னர் ராய் கூப்பர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வீடியோ மூலம் ஆங்கிலத்தில் உரை ஆற்றியுள்ளார். அந்த வீடியோ யூடியூப் இணையதளத்திலும் காணக்கிடைக்கிறது.
மாகாண கவர்னர் ராய் கூப்பர் கூறுகையில், "வடக்கு கரோலைனா மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள், அதன் பன்முக கலாச்சாரத்தில் பெருமளவில் பங்களித்துள்ளனர். இந்தியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்காவின் பல மாநிலங்கள், பல வெளி நாடுகளில் தமிழ் மொழி பெருமளவில் பேசப்படும் மொழியாக உள்ளது. தமிழ் மொழி, தமிழர்களின் அடையாளம். உலகில் இன்னும் எழுத்தப்பட்டும், பேசப்பட்டும் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழாகும்.
தமிழ் நாள்காட்டியின் முதல் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தைப் பொங்கல் என 4 நாட்கள் விழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். வட கரோலைனா மாகாணமும், தமிழர்களுடன் இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று ராய் கூப்பர் கூறியுள்ளார். அமெரிக்க வடக்கு கரோலைனா மாகாண ஆளுநரின் இந்த அறிவிப்பு தமிழுக்கும், தமிழர் கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள மற்றொரு உலகளாவிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications