புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடிய வடகொரியா.. முதல் நாளிலேயே ஏவுகணை சோதனை.. மிரட்டிய கிம் ஜாங் அன்!
வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட நடுகளுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகள் நடத்தி அதிர வைத்து இருந்த வடகொரியா 2023 ஆண்டின் முதல் நாளிலேயே மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நாடு வடகொரியா. சர்வாதிகார நாடாக அறியப்படும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என நடத்தி தொடர்ந்து மிரட்டி வருகிறது.

பொருளாதார தடை
வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அடங்க மறுக்கும் வடகொரியா தனது அடவாடியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு ஜப்பான் , தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடையால் வடகொரியா கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்த நாட்டில் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திப்பதாக கூட அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.

கொஞ்சம் கூட மாறாத வடகொரியா
ஆனாலும் எத்தனை பொருளாதார தடைகள் போட்டாலும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்கிற ரீதியில் தனது போக்கில் கொஞ்சம் கூட மாறாத வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். அதிலும், கடந்த ஆண்டு வடகொரியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70 -க்கும் மேற்பட ஏவுகணைகளை வடகொரியா சோதித்து உள்ளது.

3 ஏவுகணைகளை அடுத்தடுத்து..
அதிலும் அமெரிக்கா வரையிலும் சென்று தாக்கக் கூடிய தொலை தூர ஏவுகணையை சோதனை செய்து அதிர வைத்தது. ஆண்டின் கடைசி நாளான நேற்று 3 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்து பார்த்தது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2.50 மணியளவில்
அதேபோல் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலும் வடகொரியா தனது ஸ்டைலில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைநகர் பிராந்தியத்தில் வைத்து நடதப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 400 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

ராணுவ பலம் இருமடங்காக்கப்படும்
ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங் அன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடொரியா அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளுடன் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இருமடங்காக்கப்படும் என்றும் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications