கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாதவர் டிரம்ப்.. எங்கிருந்து மக்களை காப்பார்?- ஒபாமா விளாசல்
வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாத அதிபர் டிரம்ப் எப்படி அந்த கொடிய நோயிலிருந்து மக்களை எப்படி காப்பார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் குடியுரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிலடெல்பியாவில் பிரசாரம் மேற்கொண்ட ஒபாமா பேசுகையில் அமெரிக்கா ஒரு ஒழுக்கமான இடம்.

சப்தம்
ஆனால் நாம் மிகவும் முட்டாள்தனத்தையும் சப்தத்தையும் பார்த்துவிட்டோம். பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் டிரம்ப். தன்னையே காப்பாற்றிக் கொள்ல டிரம்பால் முடியவில்லை. இதில் அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்.

நாட்டை வெளியேற்ற
இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை வெளியேற்றுவதற்கான ஜோபிடனின் திறமையையும் கமலாவின் திறமையையும் நம்புங்கள். நாட்டை மீண்டும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். 8 மாதங்களாக நம் நாட்டில் கொரோனா பரவல் உள்ளது.

டிரம்ப் தவறிவிட்டார்
இதை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார். கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க அவர் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலை செய்வதிலும் டிரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை. டிரம்பிற்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது என ஒபாமா கடுமையாக டிரம்பை விமர்சனம் செய்தார்.

அதிபர்
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என டிரம்ப் விமர்சனம் செய்து வருகிறார். நேற்றைய தினம் பெனிசில்வானியாவில் டிரம்பும், ஒபாமாவும் தேர்தல் பிரசாரத்தை தனித்தனியே செய்தார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications