ஜோபிடன் அதிபரானால்.. செப்டம்பர் 11 போன்று தாக்குதல் மீண்டும் நடைபெறும்.. பின்லேடன் மருமகள் ஆரூடம்!
வாஷிங்டன்: ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் செப்டம்பர் 11 போன்று மற்றொரு தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக் கூடும் என ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த உலக வர்த்தக மையம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை பாகிஸ்தான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்பு படைகளால் ஸ்கெட்ச் போடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

மருமகள்
ஒசாமா பின்லேடன் இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது. இவ்வளவு ஏன் அவரது இறப்பே மர்மமாக உள்ளது என்கிறார்கள். அவர் உயிருடன் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில் நியூயார்க் போஸ்ட்டிற்கு ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பில்லேடன் பேட்டி அளித்துள்ளார்.

ஜோ பைடன்
அதில் அவர் கூறுகையில் நான் அமெரிக்க அதிபர் டிரம்பின் ரசிகை. டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுரத் தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தாமல் தடுக்க முடியும். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் அதிபராக தேர்வு செய்யப்படக் கூடாது.

அமெரிக்கா
அவ்வாறு அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக் கூடும். பயங்கரவாதிகள் வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.

ஆதரவாளர்
அதிபர் தேர்தலில் 2015-ஆம் ஆண்டு டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்தது முதல் நான் டிரம்பின் ஆதரவாளராக உள்ளேன். அவரது தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர்தான் மீண்டும் அதிபராக வேண்டும். அவர் அதிபராவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் நல்லதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications