பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பென்சில்வேனியா மாகாண வாக்குகளை எண்ணும் மையத்துக்குள் அனைத்து கண்காணிப்பாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் தங்கி உள்ளார். தோல்வி அடையும் நிலையில் உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக கூறி பல வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

பெரும்பாலான வழக்குகள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எதிராகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிக முக்கியமான பென்சில்வேனியா மாகாண வாக்கு எண்ணிக்கையும் சர்ச்சைக்குள்ளானது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் தங்களது பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை என டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அம்மாகாண கீழ்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் குடியரசு கட்சி- ஜனநாயக கட்சி இரண்டினது பார்வையாளர்களுமே அனுமதிக்கப்படவில்லை என கூறி டிரம்ப் ஆதரவாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் முறையிட்டனர். இதனையடுத்து அனைத்து தரப்பினரையும் உரிய இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றங்களிலும் பின்னடைவை சந்தித்து வரும் டிரம்ப் தரப்புக்கு இது ஆறுதலான விஷயமாகும்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications