போராட்டக்காரர்கள் முற்றுகை, தீவைப்பு.. சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்த வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள் அருகிலிருந்த கட்டடத்தின் ஜன்னல்களையும் கார்களை தீ வைத்து கொளுத்தியதாக வெள்ளை மாளிகையை சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
Recommended Video
ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை கடந்த 25ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதை கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க், கென்டக்கி, வாஷிங்டன், லாஜ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன், டெக்சாஸ், கொலம்பியா உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வலுத்தன. இந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்துவது, கடைகளை சூறையாடுவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

சிறிய பூங்கா
இந்த போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. ஜார்ஜ் பிளாய்டுக்கு ஆதரவாக 25 நாடுகளை சேர்ந்த மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சிறிய பூங்காவில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு கருப்பினத்தை சேர்ந்த மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள் உள்ளனர்.

பாதுகாப்பு படை
அவர்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இது போல் இனவாதங்களை காலங்காலமாக பார்த்து நாங்கள் சோர்ந்துவிட்டோம். இந்த தலைமுறையைச் சேர்ந்தோர் இதை சந்திக்கக் கூடாது என தெரிவித்தனர். போராட்டத்தை அடுத்து நூற்றுக்கணக்கான போலீஸாரும், தேசிய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்து
வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு ஏராளமானோர் குவிந்ததால் அங்கு வெளிப்புற விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. 6ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் உச்சமாக வெள்ளை மாளிகைக்கு அருகில் இருந்த முக்கிய கட்டடத்தின் ஜன்னல்களுக்கு தீவைத்தனர். மேலும் அங்கிருந்த கார்களை குப்புற கவிழ்த்து தீ வைத்து கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி ஒரே தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது.

கண்ணீர் புகை
போராட்டக்காரர்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டு, மிளகு ஸ்ப்ரே ஆகியவற்றை வீசி கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே ஒரு கட்டத்தில் அங்கிருந்த பாலத்திற்கு போராட்டக்காரர்கள் சென்றனர்.

காயம் இல்லை
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதுவது போல் சென்றது. இதையடுத்து அந்த லாரி டிரைவரை வெளியே இழுத்து வந்து அடித்தனர். அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். லாரி வேகமாக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் புகுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications