மதிய சாப்பாட்டை மறந்ததால் அடித்த அதிர்ஷ்டம்.. லாட்டரியில் ரூ 25 கோடியை அள்ளிய நபர்!
வாஷிங்டன்: திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு அடிச்சதாம் யோகம் என்பது போல மதிய உணவை மறந்து சென்ற அமெரிக்க நபருக்கு லாட்டரியில் ரூபாய் 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. திடீரென இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்ததும் ஒரு நிமிடம் அந்த நபருக்கு தலையே சுற்றிப்போச்சாம்.. அந்த நபருக்கு எப்படி ரூபாய் 25 கோடி அடித்தது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
அலுவலகத்திற்கு செல்லும் போது மதிய உணவை மறந்துவிட்டோமே என பாதி வழியில் நினைவு வந்தால் பலரும் உடனடியாக யு டர்ன் அடித்து வீட்டிற்கு சென்று உணவை எடுத்து செல்வார்கள். இன்னும் சிலரோ இன்றைக்கு அலுவலக கேண்டீனிலோ, ஹோட்டல்களில் சாப்பிட்டு சமாளிக்க வேண்டியதுதான் என பர்சில் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு அலுவலகத்திற்கே வண்டியை விட்டுவிடுவார்கள்.

பெரும்பாலான நடுத்தர மக்கள் வருடத்திற்கு ஒருநாளாவது இப்படி ஒரு தினத்தை அனுபவித்து இருப்பார்கள்.. ஆனால், லஞ்ச் பாக்ஸை மறந்து சென்றதன் விளைவாக பல கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். அது எப்படி? என நீங்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது.. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்..
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி போன் செய்து.. "ஏங்க! லஞ்ச் பாக்சை வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று வீட்டீர்களே...” எனக்கேட்டுள்ளார். அப்போதுதான் அவருக்கு லஞ்ச் பாக்சை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
பாதி வழி வந்துவிட்டோம்.. இனியும் திரும்பி போனால் தாமதம் ஆகிவிடும் என்று நினைத்த அந்த நபர், அருகே இருந்த ஒரு பலசரக்கு கடையை கவனித்துள்ளார். சரி.. இங்கே ஏதாவது வாங்கி மதியத்தை சமாளித்துவிடலாம் என்று கடைக்கு போனவருக்கு கண்ணில் லாட்டரி தென்பட்டுள்ளது. லாட்டரி வாங்கவே எண்ணம் இல்லையென்றாலும், தானக கண்ணில் தென்படுதே என நினைத்து 30 டாலர் மதிப்புள்ள லாட்டரியை வாங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த லாட்டரிக்கு 3 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.25.4 கோடி) பரிசு அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை பரிசாக அடித்ததும் ஒரு நிமிடம் தலை சுற்றிப்போன அந்த நபர் உடனடியக தனது மனைவிக்கு போன் செய்து தகவலை கூறியிருக்கிறார். சாப்பாட்டை மறந்து வந்ததால் ரூ.25 கோடி பரிசு அடித்து இருக்கிறது என மகிழ்ச்சி பொங்க அதிர்ஷ்டக்காரர் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகிறார்.
இது குறித்து அந்த அதிர்ஷ்டக்கார நபர் கூறுகையில், “நான் 30 டாலர் மதிப்பு கொண்ட லாட்டரிகளை வாங்கி விளையாடுவது இல்லை. ஆனால் அன்றைய தினம் என்னிடம் 60 டாலர் கையில் இருந்தது. அதனால், ஒரு டிக்கெட்டை வாங்கி பார்ப்போமே என வாங்கினேன். ஸ்க்ராட்ச் செய்து விளையாடும் டிக்கெட் அது.. நான் வாங்கிய லாட்டரியில் ஸ்கார்ட்ச் செய்து பார்த்ததில் அதற்கு 3 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அடித்துள்ளதை தெரிந்து கொண்டேன்.
முதலில் எனக்கு நம்பிக்கையில்லை. எத்தனை ஜீரோக்கள் என எண்ணி பார்த்தேன். அதன்பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. உடனடியாக மனைவியிடம் சொன்ன போது.. நான் ஜோக் அடிக்கிறேன் என நினைத்துக்கொண்டு அவர் நம்ப மறுத்தார். உண்மைதான் என மீண்டும் சொன்ன பிறகே பரிசு அடித்ததை நம்பினார்” என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications