அமெரிக்காவில் விசா பெற இப்படி செய்யாதீங்க.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! உஷார் மக்களே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா மோசடியில் இந்தியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இந்த விஷயத்தில் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்க வெளிநாட்டினர் தொடர்ந்து, சட்டவிரோத செயல்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் கண்டறியப்படும்போது, அது பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.

U-Visa
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 10 பேர், அந்நாட்டின் விசா விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்கள் U-visaவை பெற முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியர்கள் மீதான கண்ணோட்டம் அமெரிக்காவில் மாறியிருக்கிறது.
என்ன நடந்தது?
அமெரிக்காவில் U-visa என்று ஒரு வகை இருக்கிறது. இந்நாட்டு சட்டப்படி, கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டு, காவல்துறையின் விசாரணைக்கு உதவுபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். அதாவது சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நுழைந்து கொள்ளையடிக்கிறது எனில், கடைக்குள் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படிருந்து, கொள்ளை கும்பலை பிடிக்க உதவுகிறார்கள் எனில் அவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும்.
10 இந்தியர்கள்
ஆனால், சிலர் விசாவை பெறுவதற்காக போலியான கொள்ளை நாடகத்தை அரங்கேற்றுவார்கள். தங்களை பாதிக்கப்பட்டவர்களை போல காட்டிக்கொண்டு விசாவை பெறுவார்கள். அப்படித்தான் இந்த 10 இந்தியர்களும் போலியான நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். விசாரணை இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்கள் மீது கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் ஃபெடரல் கிராண்ட ஜூரி, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறார்.
இந்தியர்களே உஷார்
இதன் பின்னர் விசாரணை விரிவாக நடைபெறும். இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் இவர்களுக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம். மட்டுமல்லாது இவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தங்கள் விசா காலாவதியாகிவிட்டது எனில், அதை புதுப்பிக்க உரிய முறையில் முயற்சிக்க வேண்டுமே தவிர, சட்டவிரோத வழிகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
-
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன? -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு












Click it and Unblock the Notifications