அமெரிக்க வரலாற்றில்.. அதிபர்கள் மீதான கொலை முயற்சிகளும்.. கொலைகளும்.. உச்சகட்ட பாதுகாப்பு பின்னணி..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படுவதன் பின்னணியில் அந்நாட்டின் 150 ஆண்டு கால அரசியல் வரலாறு அடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இன்னும் 5 நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு முன் அதிபர்களாக இருந்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் மற்றும் கொலை முயற்சி தாக்குதல் பற்றி அறிய வேண்டியது அவசியம்.

150 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் 4 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 அதிபர்கள் மீது கொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனை 1865-ல் ஜான் வில்கின்ஸ் பூத் என்ற வெள்ளை இன வெறியர் சுட்டுக்கொலை செய்தார். கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதற்கு எதிராக அவர் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக வெள்ளை இன வெறியர்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார் ஆபிரகாம் லிங்கன்.

அவரைத் தொடர்ந்து அடுத்த 16 ஆண்டுகளில், அதாவது 1881-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜேம்ஸ் கார்பீல்டை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்தார். இதையடுத்து 1901-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லியை லியான் காஸ்க்லாஸ் என்ற நபர் சுட்டுக்கொன்றார்.
இந்த 3 கொலைகளுக்கு பின்னர் அமெரிக்க அதிபர்களுக்கான பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் அமெரிக்க அதிபர்கள் மீதான கொலை முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே 1901-ம் ஆண்டுக்கு பிறகு 62 ஆண்டுகள் கழித்து, அதாவது 1963-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடியை லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்ற அமெரிக்க ராணுவ முன்னாள் வீரர் சுட்டுக்கொன்றார். ஜான் எஃப் கென்னடியின் மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மிகவும் இளவயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர் ஜான் எஃப் கென்னடி. தற்போது எப்படி ஒபாமா, டிரம்ப் புகழ் பெற்று திகழ்கிறார்களோ அதே போல் அன்றைய காலக்கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர் கென்னடி. திறந்த காரில் நின்றவாறு சென்ற போது இவர் கொலை செய்யப்பட்டார்.
இப்படியாக அமெரிக்க அதிபர்கள் 4 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 1975-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்ட் போர்டை சாரா ஜேன் மூர் என்ற பெண் கொலை செய்ய முயற்சித்தார். 1981-ம் ஆண்டு ரொனால்டு ரீகனை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உடலை துளைத்த குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டதால் தன் மீதான கொலை முயற்சிக்கு பிறகும் 8 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பதவியில் நீடித்தார் ரீகன். இப்படி 15 அமெரிக்க அதிபர்கள் மீது கொலை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
இதன் விளைவாக தான் இன்று காற்று கூட அனுமதியின்றி புகாத வண்ணம் அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கவனக்குறைவால் ஏற்பட்ட அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு உலகின் உச்சபட்ச பாதுகாப்பு வளையம் அமெரிக்க அதிபருக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications