மே 4-ம் தேதி முதல்.. இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை.. பைடன் அரசு அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மே 4-ம் தேதி முதல் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு அந்த நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது.

Recommended Video

    ஒரே நாள்… 4 லட்சம் பேர் பாதிப்பு: இந்தியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா!

    கொரோனா தொற்றின் முதல் அலை ஐரோப்பிய நாடுகளை போட்டு தாக்கிய நிலையில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவை மூச்சுத்திணற வைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4,00,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 3,500-ஐ கடந்து சென்று விட்டது.

    The US has banned Indians from coming to the United States since May 4

    இந்தியாவில் நிலவும் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் ''இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்'' என்று தங்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் இந்தியாவுக்கு விமான சேவையையும் ரத்து செய்து விட்டன. ஆஸ்திரேலியா ஒருபடி மேலே போய் இந்தியாவில் இருந்து வரும் தங்கள் நாட்டினருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து விட்டது.

    இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்றும் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அந்த நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவசர பணிகளுக்காக வருபவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது.

    மே 4-ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+