நம்பியவர்கள் தேவைப்படும் போது ஆதரவாக இல்லை.. வளர்ந்த நாடுகள் மீது பாய்ந்த பிரதமர் மோடி
வாஷிங்டன்: நாங்கள் நம்பியவர்கள் தேவைப்படும் போது எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று வளர்ந்த நாடுகள் மீது பிரதமர் மோடி விமர்சனத்தை முன்வைத்தார். பப்புவா நியூ கினியவில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் நடந்து ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்து நேரடியாக பப்புவா நியூ கினியா நாட்டிற்குச் சென்றார். அங்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 3ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார்.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது:- எரிவாயு, உரம் மற்றும் மருந்துகள் வினியாக சங்கிலியில் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்து வருகிறோம். நாம் யாரை நம்பினோமோ அவர்கள் நமக்கு தேவைப்படும் போது ஆதரவாக நிற்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிளோபல் சவுத் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பருவ நிலை மாற்றம் இயற்கை பேரிடர்கள், பட்டினி, வறுமை மற்றும் சுகாதாரம் ஆகியவை தொடர்பான சவால்கள் ஏற்கனவே அங்கு இருந்தன. தற்போது புதிய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. கடினமான காலத்தில் இந்தியா உறுதுணையாக நின்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராபேவும் சர்வதேச அளவில் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து பாராட்டி பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "உலகளாவிய அதிகார போட்டியில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். கிளோபல் சவுத்திற்கு நீங்கள் (பிரதமர் மோடி) ஒரு தலைவராக உள்ளீர்கள். சர்வதேச மன்றங்களில் உங்களின் தலைமைத்துவத்திற்கு பின்னால் நாங்கள் இருப்போம்" என்றார்.
முன்னதாக ஜி 7 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூ கினியா நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். தலைநகர் மோர்ஸ்பிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக பப்புவா நியூ கினியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் அரசு தரப்பில் இருந்து வரவேற்பு அளிக்கப்படாது.
ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் நேரடியாக விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். அது மட்டும் இன்றி பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஜேம்ஸ் மராப் வணங்கினார். பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி வரவேற்ற ஜேம்ஸ் மராப், திடீரென மோடியின் காலை தொட்டு வணங்கினார். இது சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications