'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video
வாஷிங்டன்: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து டைட்டானிக் திரைப்படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்தது. இந்த நிலையில் கோடை தொடங்குவதற்கு முன்னரே கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது.
தண்ணீருக்காக மக்கள் இரவு பகல் பாராமல் அலைந்து வருகின்றனர். சென்னையில் உள்ள சில வற்றாத கிணறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சொற்ப அளவிலான தண்ணீரே கிடைக்கிறது என மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஜோலார்பேட்டை
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எடப்பாடி தரப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவதும், எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர அரசு ரூ 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

உலக நாடுகள்
எனினும் அந்த தண்ணீர் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்குமா என தெரியவில்லை. இதுதொடர்பாக ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் ஊடகங்கள் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களும் தண்ணீர் பஞ்சத்தை உலக நாடுகள் வரை கொண்டு செல்கின்றன.

டைட்டானிக் ஹீரோ
அந்த வகையில் பிபிசியில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் குறித்தும் எந்தளவுக்கு தண்ணீர் பஞ்சம் என்பதை படம் மூலம் தெரிந்து கொள்ளும் அளவிலான ஒரு புகைப்படமும் வெளியானது. இதை பார்த்த டைட்டானிக் படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ கவலை கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கவலை
அவர் இன்ஸ்டாகிராமில் கூறுகையில் சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மழையால் மட்டுமே காக்க முடியும். முற்றிலும் தண்ணீர் இல்லாத ஒரு நகரமாக சென்னை மாறிவிட்டது. நீர் ஆதாரமாக விளங்கிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் தென்னிந்திய நகரமான சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அரசால் ஏற்பாடு செய்யப்படும் குடிநீரை பிடிக்க மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

பிரார்த்தனை
தண்ணீர் பஞ்சத்தால் ஹோட்டல்களும் ரெஸ்டாரென்டுகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. எனினும் மழைக்காக மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications