சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனா மீது "மிக மிக கடும் கோபத்தில் இருப்பதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீனாவின் ஆப்களுக்கு இந்தியா தடை விதித்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
Recommended Video
சீனாவில் இருந்து கடந்த டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தொற்று நோய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மின்னல்வேகத்தில் பரவுகிறது.
இதனால் கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் ஒரு கோடியே 8 லட்சத்தை தாண்டிவிட்டது. உலகிலேயே கொரோனாவால் அமெரிக்காதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 27லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.30லட்சம் பேர் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

சீனாவிற்கு பங்கு
அமெரிக்காவின் பொருளாதாரமும், மனித வளமும் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகப் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் கொரோனா வைரஸ் பரவியதால் உலகம் முழுவதும் மக்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்ததற்கு சீனாவிற்கு பெரும் பங்கு இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

அமெரிக்காவிற்கு சேதம்
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட ட்வீட் பதிவில், "தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது, அது அமெரிக்காவிற்கு செய்துள்ள பெரும் சேதம் உட்பட, பெரும் பாதிப்பிற்காக, நான் சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன். மக்களிடமும் அதைப் பார்க்க முடியும், நானும் அதை உணர்ந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

டிரம்ப் பதில் இல்லை
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டுவருவதற்கு எதிராக டிரம்ப் நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சீனா மீது கொரோனாவை சொல்லி டிரம்ப் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்கா வரவேற்பு
இதனிடையே வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, சீனாவின் மொபைல் ஆப் பயன்பாடுகளுக்கு இந்தியா விதித்த தடையை வரவேற்றுள்ளார். "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பு அரசின் இணைப்புகளாக இந்த ஆப்கள் செயல்பட முடியும். இந்தியாவின் தூய்மையான பயன்பாட்டு அணுகுமுறை அந்த நாட்டின் இறையாண்மையை உயர்த்தும் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் " என்று கூறினார்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!












Click it and Unblock the Notifications