அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்
Recommended Video
வாஷிங்டன்: என்னை மீண்டும் அதிபராக்கினால் அமெரிக்கா பலம் பொருந்திய நாடாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து புளோரிடா மாகாணத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி ஆர்லண்டோவில் உள்ள ஆம்வே அரங்கத்தில் ஜனநாயக கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் பங்கேற்றார்.

உற்சாகம்
அப்போது பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.

வளர்ச்சி
தொடர்ந்து அவர் பேசியதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றது அமெரிக்க வரலாற்றில் வரையறுக்கப்பட்ட முக்கியமான தருணம். நான் அதிபராக இருந்த போது அமெரிக்கா குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தது.

எந்த அதிபர்களும்
இதனால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எனக்கு உங்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக தொடர்ந்து வைத்திருப்பேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாங்கள் செய்த நலத்திட்டங்களை வேறு எந்த அதிபர்களும் செய்ததில்லை.

உறுதி
பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அமெரிக்கா உயர்ந்துள்ளது. அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சோஷலிச நாடு
குடியரசு கட்சியும் ஊடகங்களும் இணைந்து வதந்தி செய்திகள் மூலம் நம்மை தோற்கடிக்க நினைக்கலாம். ஆனால் அது நடக்காது. குடியரசு கட்சியினர் நாட்டில் சோஷியலிசத்தை திணிக்க பார்க்கிறார்கள். அமெரிக்கா ஒரு போதும் சோஷலிச நாடாக மாறாது என்றார் டிரம்ப்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications