இந்தியாவை எச்சரித்த டிரம்ப்! மீண்டும் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் என்ன ஆகும்? அமெரிக்கா சொன்னது இதுதான்!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதால், இந்தியா மீது அமெரிக்கா வரியை விதித்திருந்தது. இந்த வரியை குறைக்க அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பலனளித்துள்ளது. எனவே வரியை அமெரிக்கா குறைத்திருக்கிறது. அதே நேரம் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கினால் என்ன நடக்கும் என்பது குறித்தும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வழக்கமாக எண்ணெய் வாங்கும் நாடுகளில் தடை போட்டுவிட்டு, தான் கை காட்டும் நாடுகளிடம் எண்ணெய்யை வாங்க வைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இப்படி இருக்கையில் இந்தியாவுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

என்ன பஞ்சாயத்து?
இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டிருந்தது. இந்த வரி, காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக திருப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்பதால், மத்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்தை வெற்றிப்பெற்றிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன எப்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ரஷ்ய எண்ணெய்
அதன்படி, இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யாது. அதற்கு பதில், அமெரிக்கா தான் விதித்திருந்த 50% வரியை 18% ஆக குறைத்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் எல்லாம் ஒகே போலதான் தெரியும். ஆனால், பிரச்சனை இன்னும் முடியவில்லை. ரஷ்யா நம்முடைய நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ஆயுதங்களை நாம் அங்கிருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்திருக்கிறோம்.
ரஷ்யாவின் சலுகை
அதேபோல கச்சா எண்ணெய் விஷயத்திலும் ரஷ்யா நமக்கு ஏராளமான தள்ளுபடியை கொடுத்திருக்கிறது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால், பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. இப்படி இருக்கையில் திடீரென ரஷ்ய எண்ணெய்யை வாங்க கூடாது என்று அமெரிக்கா சொல்லியிருப்பது, இந்தியாவுக்கான லாபத்தை குறைக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் எச்சரிக்கை
அதே சமயம், இப்போது வரி குறைக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் இந்தியா எண்ணெய் வாங்கினால், 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெளிவாக எச்சரித்துள்ளார். இந்தியா மறைமுகமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறதா? என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க வர்த்தக துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். எனவே இந்தியாவுக்கான வரி அச்சுறுத்தல் என்பது இன்னும் முடிவில்லை.
-
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications