போலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை
வாஷிங்டன்: பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் போலியாக பைலட் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்ததாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) கவலை தெரிவித்ததை மேற்கோள் காட்டி இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (பிஐஏ) விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சந்தேகத்திற்குரிய விமானிகளின் பைலட் சான்றிதழ்களை பரிசோதித்ததில் பலர் போலி என்பதை பாகிஸ்தான் கண்டுபிடித்தது.

போலி விமானிகள்
தனது நாட்டு விமானிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் போலியாக பைலட் சான்றிதழ் பெற்று விமானியானவர்கள் என்பதை பாகிஸ்தான் கண்டுபிடித்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படி போலியாக சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது

பதில் இல்லை
இதையடுத்து உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம், அடுத்த ஆறுமாதங்களுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் விமானங்களை இயக்க தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை

விமானங்களுக்கு தடை
இதனிடையே பாகிஸ்தானில் போலி பைலட் சான்றிதழ் பெற்று பலர் பணிக்கு வந்திருப்பதாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அண்மையில் கவலை தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க போக்குவரத்து துறை அமைச்சகம், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

நடவடிக்கை
பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், அமெரிக்காவின் தடையை பி.ஏ.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்திற்குள் நடந்து வரும் சரியான நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications