கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 1830 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
இதன் மூலம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.
மேலும் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 532,879 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் பாதிப்பு
கொரோனாவுக்கு உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பலியோனார் எண்ணிக்கை 6083 ஆக குறைந்தது. முன்னதாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொரோனாவுக்கு 6973 பேர் உயிரிழந்திருந்தனர். கொரோனாவுக்கு நேற்று உலகம் முழுவதும் 108770 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் 1779099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 402709 பேர் குணடைந்தனர்

உலகிலேயே அதிக பலி
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நாட்டையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1830 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20577 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலியில் இதுவரை 19606 ஆக உள்ளது.

532879 பேருக்கு பாதிப்பு
இது ஒருபுறம் எனில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 30003 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532879 ஆக உயர்ந்தள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 30453 பேர் குணமடைந்துள்ளனர்.

2670674 பேருக்கு பரிசோதனை
அமெரிக்காவிலேயே மிக அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 181144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 8627 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக நியூஜெர்சி மாகாணத்தில் 58151 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2183 பேர் உயிரிழந்துள்ளனர். மிசிகன் மாகாணத்தில் 23993 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1392 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா இதுவரை 2670674 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளது. அதில் 532,879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications