Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வான் மோதல் நடந்த சில நாட்களில்.. அணு ஆயுத சோதனையை நடத்திய சீனா! ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே வெடித்த மோதல், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த பதற்றத்தை குறைக்க இந்தியா திவிரமாக முயன்ற நிலையில், மறுபுறம் சீனா அணு ஆயுத சோதனையை நடத்தி பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. அணு ஆயுத சோதனையை சீனா மேற்கொண்ட விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தாமஸ் டினானோ, நேற்று முன்தினம் ஜெனிவாவில் நடந்த ஆயுத குறைப்பு மாநாட்டில் இது தொடர்பான விஷயங்களை விரிவாக கூறியிருந்தார்.

US Accuses China of Secret Nuclear Test

அதாவது இந்தியா-சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மோதல் நடந்தது. இந்த மோதல் நடந்து அடுத்த 7வது நாளில், அதாவது ஜூன் மாதம் 22ஆம் தேதி சீனா ஒரு ரகசிய அணு ஆயுத சோதனையை நடத்தியது என்று தாமஸ் கூறியிருக்கிறார். சீனா தனது 'லோப் நூர்' தளத்தில் நூற்றுக்கணக்கான டன் அளவிலான அணு வெடிப்பு சோதனையை நடத்தியதாக தாமஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கமாக அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டால், நில அதிர்வு மூலம் அந்த சோதனைகள் வெளியுலகத்திற்கு தெரிந்து விடும். எனவே நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளில் இருந்து தப்பிக்க.. அணு வெடிப்பை தரைக்கு அடியில் பெரிய குகை போன்ற அமைப்புகளில் நிகழ்த்தும் 'டீகப்ளிங்' முறையை சீனா பயன்படுத்தியிருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருக்கும்போது ஒரு வாரத்தில் சீனா இந்த அணு ஆயுத சோதனையை நடத்தியது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அணு ஆயுத சோதனையை தடை செய்யப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி உள்ளதாக அமெரிக்கா விமர்சித்திருக்கிறது.

இந்த தகவல் தற்போது வெளியாக காரணம் என்னவென்றால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயாக இடையே இருந்த கடைசி அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

50 ஆண்டுகளில் முதல் முறையாக, உலகின் மிகப்பெரிய இரு அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையே எந்த கட்டுப்பாடும் தற்போது இல்லை. எனவே பெரிய போர் ஏற்படும் முன்னர் அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஆனால், ரஷ்யாவுடன் மட்டும் ஒப்பந்தம் செய்வதில் பயனில்லை என்றும் வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வரும் சீனாவையும் உள்ளடக்கிய ஒரு புதிய முத்தரப்பு ஒப்பந்தம் தேவை என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+