சாத்தியமா?.. அதுவும் 8 மாசத்தில்?.. அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி?.. அமெரிக்கா அதிரடி
பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் போடுவது சிறந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கருதுகிறார்கள்.
உலகம் முழுவதும் தொற்று கவ்வியுள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இந்த இரண்டாவது அலையின் தீவிரம் வீர்யமானதாக இருந்தது.. அதனால்தான் லட்சக்கணக்கானோரையும் காவு வாங்கியது.
இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி வருகிறது.. இந்த நேரத்தில் 4 வது அலையும் வந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் அலர்ட் செய்து, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

கலக்கம்
மற்றொருபக்கம், இந்த வைரஸ் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது... டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், ஆல்பா என்று இதன் உருமாற்றம் அதிகரிக்கிறது.. இதில் டெல்டா வைரஸ்தான், 2வது அலை பரவலுக்கு முக்கிய காரணியாகவும் இருந்திருக்கிறது. இதற்கான மருந்தை உலக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்..

ஆர்வம்
இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆறுதலாக இருப்பதால், உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பொதுமக்களும் அபாயத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்து கொண்டிருக்கிறார்கள்... சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுதாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர்.

வறுமை
ஆனால், வறுமையில் உள்ள ஒரு சில நாடுகளால், தங்கள் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடவே தடுமாற்றமாக இருக்கிறது.. ஆனால், 2 டோஸ் போட்டுக் கொண்டு, 3வது டோஸ் என்று சொல்லப்படும் பூஸ்டர் டோஸை செலுத்த சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை என்பதால், இந்த 3வது டோஸ் செலுத்துவதில் ஹூ அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்கா
பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தினால், ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையிலும் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவதற்கு அது நிச்சயம் உதவும் என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.. ஆனால், சில தினங்களுக்கு முன்பு, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்திருந்தனர்.. இப்போதைக்கு உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று அதிகமாக உள்ளது..

ஆய்வாளர்கள்
இந்த 3வது டோஸ் செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா வேரியண்ட்டிடம் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என்றும் அந்த நாட்டு ஆய்வாளர்கள் கணித்து சொல்கிறார்கள். அதாவது, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை மீறி சில ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்துள்ளதுதான் கவனிக்க வேண்டியதாக உள்ளது..
Recommended Video

தடுப்பூசி
இப்போது தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வயது வித்தியாசமின்றி எல்லாருக்குமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வல்லுனர்கள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன... அநேகமாக அடுத்த மாதம் இதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்றே தெரிகிறது.

பாதுகாப்பு
டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்பதே அதன் சாராம்சமாக உள்ளது... வல்லுனர்களின் பரிந்துரைக்கு பிறகு எப்டிஏ என்று அழைக்கப்படுகிற அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இது தொடர்பாக இந்த வாரம் தன்னுடைய ஒப்புதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications